MATERIAL;பொதுத்தமிழ் இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்
தாள் - 3 காப்பியங்களும் புதினமும்
21FTL03
அலகு - 1 ஐம்பெரும் காப்பியங்கள்
சிலப்பதிகாரம் - இந்திர விழவு ஊர் எடுத்த காதை
மணிமேகலை -
பாத்திரம் பெற்ற காதை
சீவக சிந்தாமணி -குணமாலையார் இலம்பகம் (பாடல் 878 முதல் 895 வரை)
அலகு 2 இடைக்கால பிற்கால காப்பியங்கள்
பெரியபுராணம் -
கண்ணப்ப நாயனார்
புராணம்
கம்பராமாயணம்
- சுந்தரகாண்டம் திருவடி
தொழுத படலம்
சீறாப்புராணம் - உடும்பு
பேசிய படலம்
இயேசுகாவியம் -
அன்புக் கட்டளை பிரியாவிடை
அலகு 3 புதினம்
பிச்சிப்பூ - பொன்னீலன்
அலகு 4 இலக்கிய வரலாறு
ஐம்பெரும்
காப்பியங்கள்
ஐஞ்சிறு
காப்பியங்கள்
கம்பராமாயணம்
இஸ்லாமியர்களின் தமிழ்த்தொண்டு
கிறிஸ்துவர்களின் தமிழ்த்தொண்டு
அலகு 5 மொழித்திறன்
லக்கணம்
யாப்பு உறுப்புகள்
அணி இலக்கணம்
உவமை அணி
உருவக அணி
வேற்றுமையணி
பின்வருநிலையணி
தற்குறிப்பேற்ற அணி
சிலப்பதிகாரமஇந்திர விழவு ஊர் எடுத்த காதை
கதிரவன் தோன்றுதல்
கண்ணகன்ற பரப்பினை உடைய மண்ணகம் என்னும் மடந்தைக்கு.
கடல் ஆடை
மலை முலை
ஆறு மாலை
மழை கூந்தல்
இவள் புதைந்திருக்கும் இருள் என்னும் போர்வைக்குள் புதைந்து கிடந்தாள்.
அந்தப் போர்வையை விலக்கிக்கொண்டு மலை முகட்டில் கதிரவன் தோன்றினான். உலகம் தொழும்படித் தோன்றினான்.
மருவூர்ப் பாக்கம்
புகார் நகரத்தில் மக்கள் மருவி வாழ்ந்த கடல்-சார்-ஊர்ப் பகுதி
திறந்தவெளி மாளிகைகள்
பொருள்களைப் பாதுகாக்கும் அகன்ற இருப்பிடங்கள்
மான் கண்ணை விழித்துப் பார்ப்பது போன்ற காற்று வரும் சன்னல்கள்
இப்படிப்பட்ட மாளிகை இடங்கள் இருந்தன.
கடலிலிருந்து நிலத்துக்கு நுழையும் கயவாய்ப் பகுதியில் யவனர் இருப்பிடங்கள் இருந்தன.
அங்குப் பயன்டுத்த முடியாத அளவுக்குப் பண்டங்கள் நிரம்பிக் கிடந்தன.
கப்பலில் சென்று பொருள் ஈட்டி வந்த உள்நாட்டு வணிகர்களும் யவனர்களும் அங்கு ஒன்று கலந்து இனிதாக வாழ்ந்தனர்.
மேனியில் பூசும் வண்ணப் பொடிகள், மணப் பொடிகள், சந்தனம், பூ, அகில் போன்ற புகையும் பொருள்கள், மணத் தூவிகள் (செண்டு) முதலானவற்றை விற்றுக்கொண்டு நகர-வீதியில் நடமாடும் வணிகர்கள் திரிந்தனர்.
பட்டு, மயிர், பருத்தி முதலானவற்றில் நூல்களை நூற்று ஆடையாக நெய்யும் காருகர் (நெசவாளிகள்) வாழும் இருப்பிடங்கள் இருந்தன.
ஆடைகள், பவளங்கள், பூ-மாலைகள், (புகைத்துக் கூந்தலுக்கு மணம் ஊட்டும்) அகில் கட்டைகள், முத்துக்கள், மணிக்கற்கள், பொன்னணிகள் - இப்படிப் பல செலவங்கள் அளவிட முடியாதபடி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தெருக்கள் இருந்தன.
அளந்து தரும் பண்டங்கள், பல வகையான உணவு தானியங்கள் விற்பனைக்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த தெருக்கள் இருந்தன.
பிட்டு விற்கும் காழியர்
அப்பம் விற்கும் கூவியர்
கள் விற்கும் பெண்டிர்
மீன் விற்கும் பரதவர்
உப்பு விற்பவர்
வெற்றிலை விற்கும் பாசவர்
(சூடம், சாம்பிராணி போன்ற ) மணப்பொருள்களை விற்பவர்
பலவகையான புலால் கறிகளை விற்கும் ஓசுநர்
ஆகியோரின் இருப்பிடங்கள் இருந்தன.
வெண்கலப் பொருள்கள் செய்வோர்
செம்புப் பொருள்கள் செய்வோர்
மரப் பொருகள் செய்யும் தச்சர்
இரும்புக் கருவிகள் செய்யும் கொல்லர்
சிற்பங்கள் செய்யும் கண்ணுள்-வினைஞர்
மண்ணில் பாண்டங்களும் பொம்மைகளும் செய்யும் மண்ணீட்டாளர்
பொற்கொல்லர்
பொன்னணிகள் விற்போர்
துணி தைப்போர்
தோல்-அணி தைப்போர்
கிழிந்த துணியில் பொம்மை செயெய்வோர்
வெண்டுகளில் பொம்மை செய்வோர்
இப்படிப் பலவகைப்பட்ட தொழிலாளர்கள் பகுதி பகுதியாக வாழ்ந்தனர்.
குழலிலும், யாழிலும் குரல் முதலாகத் தொடங்கும் ஏழு பண்களையும் குற்றமின்றி இசைத்துப் பண்ணின் திறத்தைக் காட்டும் பெரும்பாணர் வாழும் இருப்பிடங்கள் இருந்தன.
சிறிய, குறுமையான கைவினைப் பொருள்களைச் செய்பவரோடு பெரிய கைவினைப் பொருள்கள் செய்பவர்களும் எத்தகைய குறைபாடும் இல்லாமல் ஒருவரோடு ஒருவர் மருவி இணக்கமாக வாழ்ந்த இடம் மருவூர்ப் பாக்கம்.
பட்டினப் பாக்கம்
அரசு சார் பெருங்குடி மக்கள் வாழும் இடம்
அரசன் நடமாடும் அரண்மனைத் தெரு
அரசனின் கொடி கட்டிய தேர் செல்லும் தெரு
அரங்க மேடைகள் இருக்கும் தெரு
பெருங்குடி வணிகர் வாழும் மாடமாளிகைகள் இருக்கும் தெரு
மறை ஓதுவோர் வாழும் தெரு
எல்லாரும் விரும்பும் உழவர் வாழும் தெரு
ஆயுளுக்கு வேது தரும் மருத்துவர்கள் வாழும் தெரு
காலத்தைக் கணக்கிடுவோர் வாழும் தெரு
இப்படிப் பாகுபட்ட தெருக்கள் பட்டினப் பாக்கத்தில் இருந்தன.
மணிகளுக்குப் பட்டை தீட்டித் துளையிடும் குயிலுநர் வாழும் தெரு
சங்குகளில் வளையல் அறுக்கும் அகன்ற தெரு
நின்றுகொண்டு அரசனை வாழ்த்தும் சூதர்
அமர்ந்துகொண்டு அரசனை வாழ்த்தும் மாகதர்
செல்லும்போது அரசனை வாழ்த்தும் வேதாளிகர்
நல்ல நேரம் பார்த்துச் சொல்லும் நாழிகைக்கணக்கர்
ஆடி மகிழ்விக்கும் மகளிர்
பூ விற்கும் பெண்கள்
குற்றேவல் செய்யும் மகளிர்
அரச குடும்பம் பயிலும் தொழில்களைக் கற்பிக்கும் கலைஞர்கள்
பல்வகை கருவிகளைடன் நின்று இவர்களைப் பாதுகாப்போர்
சிரிப்பு மூட்டி அரசனை மகிழ்விக்கும் நகை-வேழம்பர்
இப்படிப்பட்ட பெருமக்கள் வகைவகையாக வாழும் இருப்பிடங்கள் இருந்தன.
குதிரைப் படை மறவர்
யானைப்படை மறவர்
தேரோட்டும் மறவர்
நடந்து போரிடும் கடுங்கண் மறவர்
ஆகியோர் அரசனைச் சூழ்ந்திருந்து அவனுக்குப் பாய் போல் உதவுவோர்
பெருமை மிக்க சிறப்பு பெற்றவர்கள்
ஆகியோர் மலிந்து வாழ்ந்த இடம் பட்டினப் பாக்கம்.
நாள்-அங்காடிப் பூதத்தை மறக் குடி மகளிர் வழிபடுதல்
நாள்-அங்காடி
இரண்டு பெருவேந்தர்கள் போரிடும் களம் போல, மரத்தடியில் கொடுப்போர் ஓசையும் வாங்குவோர் ஓசையும் பெருகி, மருவூர்ப் பாக்கத்துக்ககும், பட்டினப் பாக்கத்துக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் அச்சமின்றி ஆரவாரம் மிக்கதாய் விளங்கியது நாளங்காடி.
காவல் பூதம்
புகாரை ஆளும் மன்னனுக்கு உற்ற துன்பத்தைச் சித்திரை மாதத்தில் சித்திரை விண்மீன் (மேழம் - மேஷம்) சிறப்புற்றிருக்கும் நாளில் போக்குவதற்கென்று தேவர் கோமானாகிய இந்திரனின் ஏவலால் புகார் நகரத்துக்கு வந்து காவல் புரிவது - காவல் பூதம்.
வேகவைத்த பயறு - புழுக்கல்
எள் உருண்டை - நோலை
புலவுச் சோறு - விழுக்குடை மடை
பூதம் சூடும் பூ
மணக்கும் புகை
பொங்கல்
ஆகியவற்றைப் படையல் செய்தனர்.
தோள்களைப் புடைத்துக்கொண்டு ஆடும் துணங்கை
கைகளைக் கோத்துக்கொண்டு ஆடும் குரவை
தெய்வம் ஏறிய ஆட்டம்
ஆகியவற்றை ஆடினர்.
பெரு நிலத்தை ஆளும் மன்னனின் நிலப் பரப்பு முழுவதும் பசி, பிணி, பகை ஏதும் இல்லாமல் நீங்கி, மழையும், வளமும் சுரக்கும்படிச் செய்ய வேண்டும் - என்று வேண்டி நாளங்காடிப் பூதத்தை முதுகுடிப் பெண்கள் குலவை ஒலி செய்தனர்.
பூதத்திற்கு வீரர்கள் உயிர்ப் பலி கொடுத்தல்
மருவூர்ப் பகுதியில் வாழும் மறம் கொண்ட வீரர்களும்
பட்டினப் பகுதியில் வாழும் படைவீரர்களும்
நான் முந்தி நீ முந்தி என்று போட்டிப் போட்டுக்கொண்டு சென்று நாளங்காடிப் பூதத்துக்குப் பலி கொடுப்பார்கள்.
விரும்பத் தகும் திறமை கொண்ட மன்னற்கு உற்ற துன்பம் நீங்க வேண்டும் என வேண்டிக்கொண்டு பலி கொடுப்பர்.
பலிக்கொடை புரிந்தவர்களின் வலிமைக்கு வரம்பாக வேறு சிலர் கல்லைக் கவணில் வைத்து எறிந்து பயிற்சி பெறுவர்.
சிலர் தோலாலான கவசம் அணிந்துகொண்டு மற்றவர் மீது வேல் வீசும் போரில் பயிற்சி பெறுவர்.
சிலர் ஒருவரை ஒருவர் கையால் குத்தித் தாக்கிப் பயிற்சி பெறுவ,ர்.
அப்போது ஆரவாரம் செய்வர்.
இது களப்போர் புரியும் பயிற்சியாளர்களின் ஆரவாரம்.
சிலர் அச்சம் தரும் வகையில் சிவந்து சுடும் கண் கொண்ட தன் கருந்தலையை பலி பீடிகையில் வைத்து, "வெற்றி வேந்தன் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வேண்டும்" என்று சொல்லிக்கொண்டு தன்னைத் தானே பலியிட்டுக்கொள்ளும் முழக்கத்தைச் செய்வர்.
அப்போது அங்கு உள்ள மயிர்த்தோல் போர்த்திய முரசம் முழக்கப்படும்.
இதற்கு "வான்பலி" என்று பெயர்.
மண்டபங்களில் விழாக் கால்கோள்
வச்சிர நாட்டு வேந்தன் கொடுத்த கொற்றப் பந்தர்
பெரிய நிலப்பரப்பில் தன்னை எதிர்த்துப் போரிடுவோர் யாரும் இல்லாததால், திருமாவளவன் போர் வேட்கையோடு புறப்பட்டு, நல்ல நாளில் தன் வாள், குடை, மயிர்கண் முரசம் ஆகியவற்றை போருக்குப் புறப்பட ஏவினான்.
என் தோள் வலிமையைப் பகைவர்கள் எதிர்கொண்டு பெறுவார்களாக - என முழங்கினான்.
புண்ணிய திசை எனக் கூறப்படும் வடதிசை நோக்கிப் புறப்பட்டான்.
அந்த நாளில்,
அவனது ஆசை நிறைவேறவில்லை.
காரணம் இமயமலை அவனது பகையை விலக்கியது.
அதனால் சினம் கொண்ட திருமாவளவன் தேவர்கள் வாழ்விடமாகக் கொண்ட அந்த இமயமலையின் பிடரியில் தன் புலிச் சின்னத்தை (கொடுவரி) பொறித்தான்.
பின் திரும்பி வரும்போது வச்சிர நாட்டு அரசன் திருமாவளவனைப் போற்றிப் புகார் நகருக்கு வந்து திருமாவளவனின் வெற்றியை விளக்கும் அடையாளமாக ‘கொற்றப் பந்தல்’ அமைத்துக் கொடுத்தான்.
அந்தக் கொற்றப் பந்தலிலும் பொங்கலிடும் அரும்பலி நடைபெற்றது.
வாள் போரில் வல்ல மகத நாட்டு வேந்தன் தன் பகைமையை விட்டொழித்து, புகார் நகருக்கு வந்து ‘பட்டி மண்டபம்’ கட்டித் தந்தான்.
அவ்வாறே, அவந்தி நாட்டு வேந்தன் புகார் நகரத்தின் நுழைவாயிலில் ‘தோரண வாயில்’ ஒன்றை அமைத்துத் தந்தான்.
இந்த மண்டபங்கள் பொன்னும் மணியும் புனைந்து அமைக்கப்பட்டவை.
நுண்வினைக் கம்மியர் (கலைஞர்) இயற்றியவை என்று காணா வகையில் தேவ தச்சன் மயன் செய்து தந்தது போன்ற மரபினவாகக் காணப்பட்டன.
மண்ணுலகக் கம்மியர் இயற்றியதோ, விண்ணுலக மயன் விதித்ததோ - என்று உயர்ந்தோர் பலரும் பாராட்டும் பாங்கினைக் கொண்டவை,
இங்கெல்லாம் விழாவுக்குக் காப்புக் கட்டப்பட்டது (கால்கோள் நிகழ்ந்தது)
ஐவகை மன்றங்களில் அரும்பலி
வெள்ளிடை மன்றம்
புதிதாக ஊருக்குள் வருபவர் தன் பெயரை ஒவ்வொரு எழுத்தாகப் பதிவு செய்யும் கண்ணெழுத்துப் பதிவுகள் எண்ணிக்கையில் பலவாக இருக்கும் கடைமுக வாயில்
தாழிட்டு அரக்கு முத்திரை இடப்பட்ட கருந்தாழ் வாயில்
இங்கெல்லாம் காவல் காப்போரின் காப்பினை மீறித் திருடுபவர் உள்ளார் எனின்,
அவர்களின் தலையில் கடுமையான சுமையினை ஏற்றிச் சுற்றி அலையவிட்டு அல்லாமல் களவாடிய பொருளை அவர்கள் எடுத்துச் செல்ல விடாத, திருட நினைப்போரை நடுங்க வைக்கும் வெள்ளிடை மன்றம்,
இலஞ்சி மன்றம்
கூன், குருடு, ஊமை, செவிடு, அழுகும் குட்டம் முதலான உடல் குறைபாடு உள்ளவர்கள் குளத்தில் மூழ்கி, நல்ல உடம்பும், நல்ல நிறமும் பெற்று அந்தக் குளத்தைச் சுற்றி வந்து வணங்கிச் செல்லும் இலஞ்சி மன்றம்
நெடுங்கல் நின்ற மன்றம்
பிறரால் வஞ்சிக்கப்பட்டுப் பித்துப் பிடித்தவர்
தெரிந்தோ, தெரியாமலோ நச்சுப் பொருளைத் தின்றுவிட்டுத் துன்புறுபவர்
நஞ்சு கக்கும் நாகத்தின் பல் பட்டவர்
கனலும் கண்கொண்ட பேயால் தாக்கப்பட்டவர்
முதலானோர் சுற்றி வந்தால் துயரத்தைத் தீர்த்து வைக்கும் நிழலை அவர்கள் மேல் பாய்ச்சும் (ray treatment) நெடுங்கல் நிற்கும் மன்றம்.
பூதச் சதுக்கம்
தவ வேடம் பூண்டு அதில் தான் மறைந்துகொண்டு வாழும் நல்ல தன்மை இல்லாதவர்
அவம் செய்து மறைந்துகொண்டு பிறர் பொருளை ஏமாற்றிப் பறிக்கும் அலவல் பெண்டிர்
மாற்றரசனிடம் தன் அரசனைக் காட்டிக்கொடுக்கும் அறைபோகும் செயலைச் செய்யும் அமைச்சர்
அடுத்தவன் வீட்டுக்காரியை அடைய விரும்புபவன்
பொய் சாட்சி சொல்லுவோர்
கோள் மூட்டுபவர்
ஆகியோர் என் கைக்குள் படுவார்களாக என்று பாசக் கயிற்றை வீசிக்கொண்டு நாலாப் பக்கமும் காத தூரம் கேட்கும்படி முழக்கம் செய்யும் பூதம் நிற்கும் சதுக்கம்.
பாவை மன்றம்
அரசு கொடுங்காலாக மாறினாலும்
அறம் கூறும் அவையில் நீதி தவறி ஒருதலைப் பக்கமாகத் தீர்ப்பு சொன்னாலும்
நாவால் எதுவும் பேசாமல் துன்பக் கண்ணீர் விட்டுக்கொண்டு நிற்கும் பாவை நிற்கும் மன்றம்
உண்மை உணர்ந்து விழுமிய பெரியோர் போற்றும் இப்படிப்பட்ட ஐந்து மன்றங்கள்
ஆகிய இடங்களில் அரும்பலிப் பொங்கல் படையல் தரப்பட்டது.
கால்கோள் விழா
முரசு அறைதல்
இந்திரனின் வச்சிரப்படை இருக்கும் கோயில் வச்சிரக் கோட்டம். அதில் இருக்கும் முரசம் கச்ச ஒப்பனை செய்யப்பட்ட அக் கோயில் யானையின் பிடரியில் ஏற்றி முரசு அறைந்து விழா பற்றி அறிவிப்பு செய்யப்பட்டது.
வெள்ளை யானை அரசன் இந்திரன், அவனுக்கு விழா. அவனுக்கு விழா தொடங்கும் நாள் இது. விழா முடியும் நாள் இன்ன நாள் - என்று சொல்லி முழசு அறையப்பட்டது
கொடி ஏற்றம்
தரும் தகைமை கொண்ட கற்பக மரம் காவல் மரமாக நின்றிருக்கும் இந்திரன் கோயிலில் மங்கலக் கொடி வானளாவப் பறக்க விடப்பட்டது.
வீதியின் மங்கலத் தோற்றம்
மரகத மணி, வயிரம், பவளம் முதலானவை பதிக்கப்பட்ட வேலைப்பாட்டுடன் கூடிய தூண்கள் இருக்கும் திண்ணைகளைக் கொண்ட மாளிகை வீடுகளின் வாயிலில் ஒப்பனைகள் செய்யப்பட்டிருந்தன.
ஆடி ஒலி எழுப்பும் கிம்புரிப் பகுவாய்
ஒளி வீசும் முத்து மாலைகள்
மங்கலச் சின்னம் பொறித்து மீன் வாய் போலத் தோன்றும் மகரவாசிகைத் தோரணம்
அங்கெல்லாம் நீர் நிறைந்த பொற்குடங்கள்
முளைப் பாலிகை
பாவை விளக்கு
பசும்பொன்னால் ஆன கொடி (பட்டுத்துணிக் கொடி)
மயிரால் செய்யப்பட்ட கவரி-விசிறி
மணக்கத் தூவும் அழகிய சுண்ணப் பொடிகள்
முதலானவை வீட்டுக்கு வெளியில் தெருவில் வைக்கப்பட்டன.
இந்திரனை நீராட்டுதல்
ஐம்பெருங்குழு
எண்பேராயம்
அரச குமரர்
கடல் வாணிகப் பரதகுமரர்
குதிரை வீரர்
யானை வீரர்
தேர் வீரர்
ஆகிய அனைவரும் ஒன்று திரண்டனர்.
அரசன் உள்ளப் பாங்கில் மேம்பட வேண்டும்
புகழ் மிக்க மன்னன் வெற்றிகள் பல பெறவேண்டும்
என்று சொல்லிக்கொண்டு இந்திரன் சிலையை நீராட்டினர்.
உலகிலுள்ள உயிர்கள் அனைத்தையும் காக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு
1008 பேர் தலையில் காவிரியாற்றுப் புண்ணிய நீரைச் சுமந்து வந்து
மண்ணுலகம் வியக்கும்படியும்
வானுலகம் மருளும்படியும்
விண்ணவர் தலைவனாகிய இந்திரன் சிலையை நீராட்டினர்.
விழா நிகழ்வு
கோயில்களில் வேள்வி
பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவன் கோயில்
ஆறு முகம் கொண்ட செவ்வேள் முருகன் கோயில்
வெள்ளை மேனி கொண்ட பலராமன் கோயில்
நீல நிற மேனி கொண்ட திருமால் கோயில்
மாரை அணிந்த வெண்கொற்றக் குடையை உடைய அரசன் கோயில்
ஆகிய இடங்களிலெல்லாம் பிரமனின் வழிவந்து அவனது நெறியை வழுவாமல் காக்கும் நான்மறையாளர் தீ வளர்த்து யாகம் செய்தனர்.
இது ஒரு பக்கம் நிகழ்ந்தது.
கடவுளர் திருவிழா
நான்கு வகையான தேவர்
18 வகையான தேவ கணங்கள்
குடிகொண்டுள்ள கோயில்களிலெல்லாம் விழா நடைபெற்றது.
அறவுரை பகர்தல்
அறம் புரியும் சமணர் கோயில்
பிறர் அறம் செய்யும் இடங்கள்
கோயில் புறநிலையாக உள்ள மண்டபங்கள்
ஆகிய இடங்களிலெல்லாம் திறனாளரின் சொற்பொழிவுகள் நடைபெற்றன.
சிறைவீடு செய்தல்
வேந்தன் பகை மன்னர்களைச் சிறைபிடித்து வைத்திருந்தான். இந்திர விழா தொடங்கிய நாளில் அவர்களுக்கு விடுதலை வழங்கப்பட்டது. இது பக்கம் நடைபெற்றது.
இசை முழக்கம்
கண்ணுக்கு விருந்தளிக்கும் கூத்தாடுவோர்
கருவி இசையுடன் பாட்டுப் பாடுவோர்
யாழில் இசை பாடும் புலவர்
நாட்டுப்பாடல் பாடும் பாணர்
இவர்களின் எண்ணுதற்கு அரிய இசைப் பாட்டுகள் ஒருபுறம் நிகழ்ந்தன.
விழா மகிழ்ச்சி
ஊரின் மூலை முடுக்குகள், தெருக்கள், அகன்ற வெளியிடங்கள் போன்ற இடங்களில் கண்ணுறக்கம் இல்லாமல் விழா முழவின் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.
இளவேனில் - தென்றல் - தெரு
காதல் கொழுநனைப் பிரிந்து அலர் தூற்றப்படாத மாதவி போல,
ஆசை மூட்டும் காதணி குழை அணிந்த மாதவிநுடன்
ஆசை மூட்டும் தழைகளுடன் கூடிய மாதவிக் கொடியுடன்
இல்லத்தில் வளர்க்கப்படும் முல்லை. மல்லிகை, மயிலை ஆகிய பூக்களும்,
தாழியில் நிற்கும் நீரில் பூத்திருக்கும் குவளை, செங்கழுநீர் ஆகிய பூக்களும்
மாலையாகக் கட்டப்பட்டுப் பொலிவுற்றிருந்தன.
காமத்தின் களிப்பை மூட்டின.
இப்படி மணக்கும் பூக்கள் நிறைந்த மணம் மிக்க பூஞ்சோலையில் அமர்ந்து மக்கள் களித்தனர்.
மேலும் நறுமணப் புகை, சந்தனம் ஆகியனவும் சிறப்புற்று மணம் கமழ்ந்தன.
கோவலன் சிரித்து மகிழும் நகரத்துப் பரத்த நண்பர்களுடனுடனும் குழலூதும் பாணனுடனும் திரிவது போல வண்டுகள் பூக்களைத் தேடித் திரிந்தன.
தெருவில் பொதியமலைத் தென்றல் வீசியது.
வீதியில் உலவும் பரத்தையரை ஆடவர் புகழ்தல்
கருங்கூந்தல் என்னும் மேகத்தைச் சுமந்துகொண்டு
நிலாவில் இருக்கும் குட்டி முயல் நிழலை நீக்கிவிட்டு
மூக்கு என்னும் குமிழம்பூவை எழுதிக்கொண்டு
வானத்தில் இருந்தால் ராகு-கேது நிழல் பாம்புகள் விழுங்கும் என்று ஆஞ்சி
மண்ணுக்கு வந்து திங்கள் இங்குத் திரிகின்றதோ?
ஆண் மீனைக் பொடியாபக் கொண்டவன் காமன். அவன் ஒரு பெண்ணை வளர்த்தான். அந்தப் பெண் வானத்தில் தோன்றும் மின்னல்-கொடி. அது நீருக்குள்ளே தோன்றும் நிலவாக இருந்து அங்குள்ள நீர்த் திவலைகளைப் பருகி, ஈரத்தோடு வந்து நிற்கும் மின்னலாக மண்ணுலகுக்கு வருவது உண்டு போலும்.
என் அழகைப் பார்" என்று சொலிக்கொண்டு திருமகள் இந்த ஊரில் புகுந்துகொண்டாள் போல, இங்குள்ள பெண்கள் தோன்றுகிறார்களே!
தீ நிறத்து இலவம் பூ - வாய்
முல்லைப் பூ - பல்
கருங்குவளைப் பூ - கண்
குமிழம் பூ - மூக்கு
பூத்து
உள்ளே வரிந்த ஒப்பனைக் கோலம் செய்துகொண்டு
தனக்கு உரிய துணையைத் தேடிக்கொண்டு
தேன் இருக்கும் தாமரை தெருவில் திருகின்றதோ?
ஆளும் மன்னவனின் செங்கோல் ஆணையை மறுப்பதற்கு அஞ்சி, பல உயிர்களைப் பருகும் கூற்றுவன், தன் ஆண் உருவத்தை மாற்றிக்கொண்டு, உயிரைக் கொல்லும் தொழிலிலிருந்து மட்டும் மாறாமல் நாணம் கொண்ட பெண் உருவத்தில் புன்னகை பூக்கும் தன் முகத்தைக் காட்டிக்கொண்டு, யாழ் போல் பண்ணிசைக்கும் மொழியைப் பேசிக்கொண்டு பெண்மைக் கோலத்தில் இங்குத் திரிதலும் உண்டு போலும்.
என்றெல்லாம் சொல்லும்படிக்கு உருவம் இல்லாத காமனின் படையாகிய மகளிர், போரிடும் பெண்ணாக எதிரில் நின்று, என்னை மேலும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி, தன் ஒப்பனைக் கோலத்தால் தனது முழு உடம்பையும் காட்டிக்கொண்டு, காம விருந்தோடு மகளிர் கணவனோடு கூடி மகிழ்ந்திருந்தனர்.
மனை புகுந்த ஆடவர் - மனைவியர் ஊடல்
தெருவில் கண்ட அழகியரை வியந்து பேசிவிட்டு வீட்டுக்குள்ளே ஆடவர் நுழைந்தனர்.வீட்டில் இருந்த மகளிர் வடமீன் போன்ற கற்புடையவர். ஆசையை மூட்டும் ஒளி மிக்க முகம் கொண்டவர். நீல மணி நிறத்தில் பூத்திருக்கும் குவளை மலரின் மொட்டு போன்ற கண்களை உடையவர்கள். அவர்களின் கடைக்கண்கள் சிவக்கும்படி ஊடல் கொண்டனர். விருந்தோடு வந்தாலும் தீராத அளவுக்கு ஊடல் கொண்டிருந்தனர். அவர்களின் ஊடலை எவ்வாறு போக்குவது தெரியாமல் ஆண்கள் நடுங்கினர்.
கண்ணகிக்கும் மாதவிக்கும் கண் துடித்தல்
கண்ணகி, மாதவி இருவருக்கும் கழுநீர் பூ போன்ற கண்கள்.
அவர்கள் உள்ளத்தில் நிறையுடைமை.
அது வெளியில் புலப்படவில்லை.
இருவர் கண்களிலும் கண்ணீர்.
கண்ணகியின் கண்கள் கருமை நிறத்தில் இருந்தன. (கோவலனின் கூடலைப் பெறாத நிலை)
மாதவியின் கண்கள் சிவந்திருந்தன. (கோவலனோடு கூடித் திளைத்த சிவப்பு)
கண்ணகிக்கு இடக்கண் துடித்தது, (கோவலன் வரப்போகும் நன்னிமித்தம்)
மாதவிக்கு வலக்கண் துடித்தது (கோவலனை நிலையாகப் பிரியப்போகும் தீ நிமித்தம்)
இது இந்திரனுக்கு விழா நடக்கப்போகும் முதல் நாள்.
மணிமேகலை
பாத்திரம்
பெற்ற காதை
பாத்திரம் பெற்ற காதை சுட்டும் அறக்கருத்துகள்
. முன்னுரை
மணிமேகலை கதைச் சுருக்கம்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகவே கருதப்பட்டு வருகின்றது.
இக்காப்பியத்தில் கதாநாயகியாக
வலம் வரும் மணிமேகலை கோவலனுக்கும் மாதவிக்கும்
பிறந்த மகளாவாள். மணிமேகலை, இள வயதிலேயே
துறவறம் பூண்டு அமுதசுரபி மூலம் மக்களின்
பசியைப் போக்கும்
மேன்மைச் செயலை மேற்கொள்ளும் பாத்திரமாகவே
இக்காப்பியத்தில் வலம் வருகிறாள். இக்காப்பியம் உலக மக்களுக்குப் புத்த மதக் கோட்பாட்டினைத் தெரிவிக்கும்
வண்ணம் அமைந்திருந்தாலும், இதில் பல அறக்கருத்துகள் நம் வாழ்வுக்குத் துணை புரியும் வகையில் இடம்பெற்றுள்ளன.
பாத்திரம்
பெற்ற காதை
மணிமேகலையில் காதைகளில் வது காதையாகப் ‘பாத்திரம்
பெற்ற காதை’ இடம்பெற்றுள்ளது இக்காதையில்தான், மணிமேகலை அள்ள அள்ள குறையாத அமுதசுரபியைப் பெற்ற நிகழ்வு
இடம்பெறுகிறது. மணிமேகலை
தன் தோழி சுதமதியுடன் நந்தவனத்தில் மலர் கொய்யும் போது, அங்கு அவளைத் துரத்தி வந்த உதயகுமாரன் எனும் இளவரசனிடமிருந்து தப்பும் பொருட்டு
ஒரு பளிங்கு
அறையில் புகுந்தாள்.
அங்கிருந்து அவள் மணிமேகலா தெய்வத்தால் மணிபல்லவத்
தீவிற்குக் கொண்டுச்
செல்லப்பட்டாள். அத்தீவில்
இருந்த புத்த பீடிகையை வணங்கி பழம் பிறப்பை அறிகிறாள். பின்பு அங்குத் தோன்றிய தீவதிலகையிடம் தன்னைப் பற்றி கூறி, முன்னொரு காலத்தில்
ஆபுத்திரனால் கைவிடப்பட்ட
அமுதசுரபியைப் பெறுகிறாள்.
அதன் பின் தீவதிலகை அவளுக்கு அறங்கள்
சிலவற்றை உரைக்கிறாள்.
. பாத்திரம் பெற்ற காதை சுட்டும் இன்றைய வாழ்வோடு
தொடர்புடைய அறக்கருத்துகள் :
.அன்னமிடுதலின் மேன்மை
தானங்களில் சிறந்த உயரிய தானமாகக் கருதப்படுவது
அன்னதானம்3 என்று கூறினால்
மறுப்பாரில்லை. உணவைப் பசியுற்றோருக்கு உவந்து வழங்குவதே அன்னதானத்தின் சிறப்பம்சமாகும். இது, சிறந்த மனிதப் பண்புகளில் ஒன்றாகவும்
கருதப்படுகிறது. இவ்வாறு அன்னமிடுதலின் மேன்மையைப்
பற்றி மணிமேகலையில்,
பாத்திரம் பெற்ற காதையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே 5
என்ற வரிகளின் வழி, பசித்தோருக்கு உணவிடுதல்,
உயிரையே கொடையாக
அளித்ததற்குச் சமமாகக்
கருதப்படும் என்று கூறப்படுகின்றது.6 இறைவனுக்கடுத்து உலகில் உயிர்கள் பசித்திருக்கும் வேளையிலும்
தக்க தருணத்தில்
உணவளிப்போரே நமக்கு உயிர் கொடுத்தவர்களாகின்றனர் என்பது இவ்வரிகளின் வழி தெளிவாக
அறிய முடிகின்றது.7
பசி என்பது ஒரு நோயாகவே கருதப்படுகின்றது. இப்பசியானது
ஒருவரது சிறப்பை
அழிக்கவல்லது. இதைத்தான்
மணிமேகலையில்,
குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்வி
பெரும்புனை விடூஉம்
நாணணி களையும் மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் 8
என்று சீத்தலை சாத்தனார்
எடுத்தியம்பியுள்ளார். அதாவது பசி மனிதன் ஒருவனை ஆட்கொள்ளும் போது, அம்மனிதன்
தன்னை மறக்கிறான்;
தன் சுற்றுப்புறத்தை மறக்கிறான். அவன் கற்ற கல்வி அந்நேரத்தில்
பயன்படாமல் மனிதனுக்குரிய நாணப் பண்புகளைக்
கைவிட்டு பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டான்.9 அவ்வாறான கொடுமைகளை இன்றும்
நாம் கண்கூடாகக்
கண்டு வருகிறோம்.
நகர்ப்புறங்களில், கைகளில்
குழந்தையுடனும், வயோதிகர்களும் பசிக்கொடுமயினால் பொது இடங்களில் பிச்சை எடுத்த வண்ணமாகத் தான் உள்ளனர்.
நிலைமை இவ்வாறு
இருக்க வெறும் கோயில்களிலும் விழாக்களிலும் வழங்கப்படும் அன்னதானமானது
இந்நிலை சீர் அடைய பெரிதும் உதவாது என்றே கூறலாம்.
அதே வேளையில், மக்களது
பசிப்பிணியைப் போக்குபவர்களை வெறும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்று தீவதிலகை,
பசிப்பிணி யென்னும் பாவியது தீர்த்தோர்
இசைச்சொல் அளவைக் கொன்நா நிமிராது
என்ற வரிகளின் வழி இக்காதையில் மணிமேகலையிடம் கூறுகிறாள்.
இவ்வாறு சோற்றுக்கொடையின் சிறப்பும்
அக்கொடையாளியரின் உலகப் புகழும் இந்நூலால் பறைசாற்றப்படுகின்றன.
எனினும், பசிப்பிணியைப் போக்கும்
ஆற்றல் இல்லாதவர்களுக்கு அன்னமிடுதலே அறச்செயலாகக்
கருதப்படுகின்றது. ஏனையவர்களுக்கு உணவிடுதல் அந்த அறச்செயலையே விலை கூறுவது
போல் கருதப்படும்
இதையே, சாத்தனார் பெருமான்,
ஆற்றுநர்க் களிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்க
ளரும்பசி களைவோர்
மேற்றே யுலகின் மெய்நெறி வாழ்க்கை
என்று எடுத்தியம்பியுள்ளார். அதையே திருவள்ளுவரும்,
வறியார்க்கு ஒன்று
ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீ
துடைத்து
அதாவது, இல்லாதவர்களுக்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது
என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும்.5 எனவே, பசியால் வாடும் மக்களுக்கு உதவி செய்து நல்லலறத்தை மேற்கொள்ளும் கடமை நாம் அனைவருக்கும் உண்டு. இவ்வாறு செய்யப்படும் அறமானது,
இப்பூவுலகில் நிலைத்து
நிற்கும் தன்மையுடையது.
அன்பின் மேன்மை
. உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல்
அன்பு
என்பது நெருக்கமான உள்ளப் பிணைப்பு தொடர்பான ஒர் உணர்வும் அனுபவமும் ஆகும்.6
ஈன்ற குழவி முகங்கண் டிரங்கித்
தீம்பால் சுரப்போள் தன்முலை போன்றே
நெஞ்சு வழிப்படூ 7
என்ற வரிகளின் வழி, ஈன்ற குழந்தையின் முகம் கண்டு, பெற்ற தாய்க்குப்
பால் சுரப்பதைப்
போல், பசியால்
வாடி, அயர்ந்து,
சோர்ந்திருக்கும் வரியோர்களைக்
கண்டவுடன் அன்பால்
கிரங்கி இப்பாத்திரம்
அமுதத்தைச் சுரக்கும்
என மணிமேகலை
தீவதிலகையிடம் கூறுகிறாள்.
இங்கு உயிர்கள்
பால் மணிமேகலை
கொண்டிருக்கும் அன்பு மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது. உயிர்களிடத்தில் செலுத்தப்படும் அன்பானது தெய்வத்திற்குச் சமம் என்பதை ‘அன்பு என்பது தெய்வமானது’
என்ற முன்னோர்களின் கூற்று புலப்படுத்துகிறது. மனிதர்கள் சக மனிதர்களிடம் அன்பு செலுத்துதல் புனிதமான செயலாகும்.
தாய் மகள் மீது கொண்ட அன்பு
வழுவறு தெய்வம் வாய்மையின் உரைத்த
எழுநாள் வந்த
தென்மகள் வாராள்
வழுவாய் உண்டென மயங்கி 8
என்ற வரிகளின் வழி மாதவியின் கலக்கத்தைச் சாத்தனார்
பெருமான் படம் பிடித்து காட்டுகின்றார். தெய்வம்
கெடு கொடுத்த
ஏழு நாட்கள்
முடிவடைந்த பின்னும்
தன் மகள் இன்னும் இல்லம் திரும்பவில்லையே என்று மணிமேகலையின்
தாய் மாதவியும்
செவிலித் தாய் சுதமதியும் கலங்கி வருந்தி
காத்திருப்பதாக இப்பாடல்
வரிகள் அமையப் பெற்றுள்ளன.9 இது மகள் மீது தாய் கொண்டிருக்கும் அன்பையும்
பாசத்தையும் காட்டுகின்றது.
இன்றைய பரபரப்பு
மிகுந்த வாழ்க்கைச்
சூழலில், மக்கள் அன்பிற்குக் கொடுத்து வரும் முக்கியத்துவம் நாளுக்கு
நாள் குறைந்து
கொண்டே வருகிறது.
ஆடம்பர வாழ்க்கை
வாழ விரும்பி
எந்நேரமும் பொருளீட்டுவதிலேயே குறிக்கோளாக இருக்கும்
மக்கள் வாழ்வில்,
அன்பு இன்று வெறும் சொல்லாகவே இருந்து
வருகிறது. குடும்ப
அமைப்பில் இந்த அன்பு சரியான முறையில்
வெளிகாட்டப்படாததால், குடும்பங்களில் அமைதி காணப்படுவதில்லை.
உலக அரங்கிலோ,
அன்பின்மை காரணமாக,
வன்முறைச் செயல்கள்
அதிகரித்த வண்ணம் உள்ளன. உலக அரங்கில்
போர்கள் பல நடந்த வண்ணமாகவே உள்ளன. சமயங்கள் அனைத்தும் உயிர்களிடத்தில் அன்புடைமையை வலியுறுத்தினாலும், உலகில் வன்முறைச்
சம்பவங்கள் அதிமாகவே
காணப்படுகின்றன. இதிலிருந்து,
உயிர்களிடத்து அன்பு செலுத்தும் பண்பு மக்களிடையே
குறைந்து வருகிறது
என்று தெள்ள தெளிவாகப் புரிகிறது.
.3 மூத்தோரை
மதித்தல்
.3. பெற்றோரை
மதித்தல்
இக்காதையில் மணிமேகலை ஏழு நாட்கள் கழித்து, தீவதிலகையிடம் இருந்து விடைபெற்று
தன் தாயையும்
செவிலித் தாயையும்
சந்தித்து அவர்களது
பழம்பிறப்பை விளக்கி
கூறி பின் அவர்களது காலில் விழுந்து
வணங்குமாறு பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளன.
இரவி வன்மன் ஒருபெரு மகளே
துர்கத் தானைத் துச்சயன் தேவி
அமுத பதிவயிற் றரிதில் தோன்றித்
தவ்வைய ராகிய
தாரையும் வீரையும்
அவ்வைய ராயினீர் நும்மடி தொழுதேன்
பெரியோரின் ஆசி பெறுதல்
இன்னும் சமூகத்தில்
ஒர் வழக்கமாகவே
இருந்து வருகிறது.
விழாக்களிலும் பண்டிகைகளிலும் நம்மவர்கள் இன்னும்
வீட்டின் உள்ள பெரியோர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவதைக்
கண்கூடாகக் காண இயலும்.
.3 குருவைப்
போற்றுதல்
மாபெரும் பாத்திரம் நீயிரும் தொழுமெனத்
தொழுதனர் ஏத்திய தூமொழி யாரொடும்
பழுதறு மாதவன் பாதம் படர்கேம்
எழுகென வெழுந்தனர் இளங்கொடி தானென்
மணிமேகலையின் கையில் இருந்த அமுத சுரபியை
மாதவியும் சுதமதியும்
வணங்கிய பின், குற்றமற்ற பெருந்தவம் உடைய அறவண அடிகளது பாதங்களை
வணங்கச் செல்வோம்
வாரீர் என மணிமேகலை மாதவியையும் சுதமதியையும்
அழைத்துக் கொண்டுச்
செல்கிறாள் இங்கு இம்மூவரும் தங்களுக்குக் குருவாகச்
செயல்பட்டு வந்த அறவண அடிகளைப் பெரிதும்
மதித்து வந்தனர்
என்பது நன்கு புலப்படுகிறது.
இந்த
பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள் நம் ஆசிரியர்களே. குருவருளால் தான் திருவருள், அதாவது இறைவனின்
அருள் கிடைத்து நிம்மதியாக வாழ முடியும். இக்காதையில் அறவண அடிகள் மணிமேகலை, மாதவி, சுதமதி ஆகியோருக்குக் குருவாக
வலம் வருகிறார்.
அவரே இவர்களுக்குப் பௌத்த சமயத்தைப்
போதித்து அற நெறியில் நிற்க வகை செய்கிறார். இவர் மணிமேகலை,
மாதவி, சுதமதி ஆகிய மூவரும் இறைவனிடம்
நெருங்க உற்ற துணையாக இருந்துள்ளார்.
இதிலிருந்து, நாம் வாழ்வில்
ஒன்றைக் கற்றுக்
கொள்ளவும், இறைவனை நெருங்கவும் குருவருள் மிகவும்
அவசியமாகும். இன்றும்
நம் வாழ்வில்
குருவைப் போற்றும்
பண்பு இருந்து
கொண்டு தான் வருகின்றது. ஆங்காங்கே, பல குருமார்களின் ஆசிரமங்கள்
வழிபாட்டுக்கு உரியவையாக
இருந்து வருகின்றன.
எனினும், இந்நிலை போலி குருக்கள் உருவாவதற்கும் காரணியாக
அமைந்து விட்டது.
இப்பொழுது எங்கும்
நேற்று பெய்த மழையில் பூத்த காளான்களைப்
போல் பலர் சரியான தகுதிப்பாடு இல்லை எனினும் தங்களைக் குரு என்று அடையாளப்படுத்தி கொள்கின்றனர்.
இவர்களில் பலர் பணம் தேடும் நோக்கத்திற்காகவே இவ்வாறு செயல்படுகின்றனர். உண்மையை அறியாத மக்களும் இது போன்ற ’குருக்களை’ நம்பி வழிபட்டு
பணத்தையும் பொருளையும்
இழந்த கதைகள் பல உண்டு. இன்றும்
தமிழகத்தில் பல போலி குருக்கள் காவல் துறையினரினால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆகவே, இது போன்ற விஷயங்களில் நம்மவர் இன்னும்
விழிப்பாகச் செயல்படுவது
மிகவும் அவசியம்.
. மனித வாழ்வில் இறை நம்பிக்கை
மணிமேகலை முழுக்க முழுக்க
பௌத்த சமய காப்பியமாகும். இக்காப்பியத்தில் புத்தர் பெருமான்
தெய்வமாகக் கருதி வணங்கப்பட்டுள்ளார். இக்காப்பியத்தில் எங்கு திரும்பினாலும் பௌத்த சமய மேன்மையே மேலோங்கி நிற்பதைக்
காண முடிகின்றது.
போதி நீழற் பொருந்தித் தோன்றும்
நாதன் பாதம்
நவைகெட ஏத்தித்
தீவ திலகை சேயிழைக் குரைக்கும்
போதி மரத்தின் கீழ் வீற்றிருக்கும் குற்றமற்ற
புத்தர் பெருமானை
வணங்கி, குற்றங்கள்
நீங்குமாறு போற்றி தீவதிலகை மணிமேகலைக்கு அறங்கள்
உரைக்கத் தொடங்குவதாக
இவ்வரிகள் இடம்பெற்றுள்ளன. இங்கு புத்தர்
தெய்வமாக வணங்கப்படுகின்றார். அறங்கள் கூறுமுன்
இறைவனை வழிப்பட்டது,
மணிமேகலையிடம் உள்ள இறை நம்பிக்கையைப் படம் பிடித்து காட்டுகின்றது.
இறைநம்பிக்கை, ஒவ்வொரு
மனிதனும் வாழ்வில்
வழி தவறாமல்
சரியான பாதையில்
நடக்க உற்ற துணை புரிகிறது. மனித வாழ்விற்கு இறைநம்பிக்கை ஒரு தண்டவாளத்தைப் போன்றது
என்றால் மறுப்பாரில்லை. உண்மையான இறைநம்பிக்கை நற்செயல்களைச் செய்ய
நம்மைத் தூண்டுகிறது.
நம் நாட்டில் இறைநம்பிக்கை
மக்களிடையே மிகவும்
ஆழமாகப் பதிய நம் நாட்டின் ’இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்’
என்ற முதல் தேசிய கோட்பாடே வழிவகுக்கின்றது. அதாவது, எந்தச் சமயமாக இருந்தாலும் அந்தந்த
சமய வழிபாட்டிற்கு ஏற்ப தங்கள் இறைவன் மீது நம்பிக்கை
வைக்க வேண்டும்
என்பது நாட்டின்
கோட்பாடாக அமைந்திருப்பது இறைநம்பிக்கையின் அவசியத்தை
நமக்கு உணர்த்துகின்றது.
இக்காதையில் வேறொரு சூழ்நிலையிலும் இறைவன் மீது கொண்ட பக்தி வெளிப்படுகிறது.
தீவ திலகை தன்னடி வணங்கி
மாபெரும் பாத்திரம் மலர்க்கையில் ஏந்திக்
கோமகன் பீடிகை தொழுது வலங்கொண்டு
இங்கு, மணிமேகலை
தீவதிலகையிடமிருந்து விடைபெற்று
தன் ஊருக்குச்
செல்லும் முன், தீவதிலகையை வணங்கி புத்த பெருமானது பீடிகையை வலம் வந்து தொழுத பின்னே மீண்டும் வான் வழியே தன் ஊருக்குப் புறப்படுகிறாள்5 இங்கு மீண்டும் புத்தரை
வழிபடுவது போல் இந்த காட்சி அமைகின்றது.
இது, மணிமேகலை
புத்தர் மீது கொண்டிருக்கும் இறைநம்பிக்கையை நமக்குப் படம் பிடித்து காட்டுகின்றது.
.5 வினைக் கோட்பாடு
இக்காதையில் மனித வாழ்வில் வினைக் கோட்பாட்டின்
செயல்பாடு குறித்து
கூறப்பட்டுள்ளது. இந்தியச் சமயங்கள் யாவும் வினைக்கோட்பாட்டில்
நம்பிக்கை கொண்டவை. பௌத்த சமயமும் இதற்கு விதிவிலக்கன்று.
நாவலொடு பெயரிய மாபெருந் தீவத்து
வித்தி நல்லறம் விளைந்த வதன்பயன்
துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து 6
இந்த வரிகளில், நாவலந்தீவு
எனும் பெரிய தீவில் நல்லறத்தை மேற்கொண்டதால், அதன் விளைவாக
செல்வத்தை அனுபவிப்பவர்கள் வீடுகளில் மக்கள் பிச்சை எடுக்கின்றனர்7 என்று சீத்தலை
சாத்தனார் கூறியுள்ளார்.
அதாவது, நல்ல வினைகளைச் செய்தவர்களுக்கு வசதியான
வாழ்க்கை கிட்டியுள்ளதை நாம் இங்கு காண இயலுகிறது.
வினைகள்
இருவகைப்படும். அவை நல்வினை, தீவினை
என்பனவாகும். உயிர்கள்
நல்வினை, தீவினை
என்னும் இருவினைப் பயனால் தத்தமக்குரிய பிறவி எடுத்து, தம் வினைகள் பயனைத் தரும்
காலத்தில் தாம் செய்த வினைக்கு ஏற்ப இன்பமும் துன்பமும் அடைகின்றன. அதாவது, பழம் பிறப்பில் நல்லறம்
செய்தவர்கள் அதற்கு அடுத்த பிறவிகளிலும் அதன் பயனைத் தொடர்ந்து அனுபவிப்பர்
எனவும், நாம் செய்த தீவினைகளும் நம்மை அடுத்தடுத்த பிறப்புகளில் துரத்தும்
எனவும் இவ்வரிகளின்
வழி அறிய முடிகிறது. நம் முன்னோர்கள்
கூறிச் சென்ற ‘வினை விதைத்தவன் வினை
அறுப்பான், தினை
விதைத்தவன் தினை
அறுப்பான்’ என்ற பழமொழி இக்காதையில் கூறப்பட்டுள்ள வினைக் கோட்பாட்டிற்கு நன்கு பொருந்தும். ஒருவன்
எதை விதைக்கிறானோ அதுவே விளையும். அதே போல நாம் நல்லது செய்தால்
நமக்கு நல்லதும் தீயது செய்தால் தீயதும் விளையும்.
ஒவ்வொரு
வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. அது நாம் செய்த வினையைப்பொறுத்தே அமையும். சுவற்றில் எறிந்த பந்து அதே போல் திரும்பி
வந்தே தீரும். அதே போல், ஓவ்வொரு மனிதனும் இப்பூதவுடல்
எய்தி உடன் கொண்டு போவது அவனவன் செய்த வினைப் பயன்கள் மட்டுமே.
.6மறுபிறப்புத் தத்துவம்
தாம்
செய்த வினைகளுக்கு ஏற்ப உயிர்களுக்கு மறுபிறவி உண்டு8 என்ற கோட்பாட்டில் பௌத்த சமயத்திற்கு ஆழமான
நம்பிக்கையுண்டு. அதாவது, நாம் நிச்சயமாக,
முற்பிறப்பின் பலாபலன்களை
அடுத்தடுத்த பிறப்புகளில்
அடைவோம் என்ற செய்தி இக்காதையில் இடம்பெற்றுள்ளது.
விட்ட பிறப்பில்யான் விரும்பிய காதலன்
திட்டி விடமுணச் செல்லுயிர் போவுழி
உயிரோடு வேவே
னுணர்வொழி காலத்து
வெயில்விளங் கமையத்து விளங்கித் தோன்றிய
சாது சக்கரன் றனையா
னூட்டிய
காலம் போல்வதோர் கனாமயக் குற்றேன்
ஆங்கதன் பயனே
ஆருயிர் மருந்தாய்
ஈங்கிப் பாத்திரம் என்கைப் புகுந்தது 9
மணிமேகலை முற்பிறப்பில் தன் கணவன் ராகுலன் அரவம் தீண்டி மாண்டு போக, அவனுடன் சேர்ந்து தானும் தீயில் குதித்து மாண்டாள்.
அத்தீயில் தம் உணர்வு அடங்கும் வேளையில்
அவள் முன்னொரு
சமயத்தில் சாதுசக்கரன்
என்ற முனிவருக்கு
உணவளித்தது அவளுக்குக்
கனவு போல் தோன்றியது. அந்த நினைவுடனேயே
மணிமேகலை மாண்டாள்.3
அதன்
விளைவாகவே, இப்பிறப்பில்
அமுதசுரபி எனும் பாத்திரம் அவள் கைக்கு வந்ததாக மணிமேகலை தீவதிலகையிடம் கூறுவது போல் இவ்வரிகள்
இடம்பெற்றுள்ளன.3 அதே வேளையில், முற்பிறப்பில் செய்த தீவினையால்
இப்பிறப்பில் துன்பப்படுவோரையும் இக்காதையில் சாத்தனார்
பெருமான் குறிப்பிட்டுள்ளார்.
துய்ப்போர் தம்மனைத் துணிச்சித ருடுத்து
வயிறுகாய் பெரும்பசி யலைத்தற் கிரங்கி
வெயெலென முனியாது புயலென மடியாது
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்துமுன்
அறங்கடை நில்லா தயர்வோர் பலரால்
இந்த வரிகளின்
வழி, முற்பிறப்பில் செய்த தீவினையின்
பயனாக, மக்கள் கிழிந்த கந்தல் ஆடைகளை அணிந்து, கடும் பசியால்
அதிக துன்பப்பட்டு,
வெயில் என்று வெறுப்படையாமலும், மழை என்று ஓரிடத்தில் தங்காமலும்
செல்வந்தர்கள் வீட்டு வாயிலில் பிச்சை எடுக்கும்
இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்பது அறிய வருகிறது.33
.7 வீடுபேறு அடைதலே நிலையான
இன்பம்
உலக
வாழ்வு நிலையற்றது.3 தெய்வ நிலைக்கு முன்னேறிய மனிதன், எந்த ஒரு மூலப்
பொருளிடமிருந்து வந்தானோ, அந்தப்
பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே முக்தி. அதுவே மோட்சம்; அதுவே வீடுபேறு; அதுவே ஆன்ம விடுதலை. கர்ம கொள்கைப்படி, ஒருவன் செயலுக்கு ஏற்ப ஒரு பலன் உண்டு. கர்மாவின் பலனை அது நல்லதோ, கெட்டதோ அழித்தால் தான் உயிர், வீடு பேற்றினை அடைய
முடியும். முற்பிறப்பினை உணர்ந்தவர்களுக்குத் தருமபதம் உரியது என்பது புத்த சமயக் கொள்கையாகும். இதனை இக்காப்பியம்,
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமை சால்
நல்லறம் பிறழா
நேன்பினர்
கண்டு கைதொழுவோர் கண்ட தற்பின்னர்
பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி
உரிய துலகத் தொரு
தலையாக5
என எடுத்துரைக்கின்றது. இவ்வகையில்
புத்தசமயத்தின் தலையாய கொள்கையினை விளக்கம் செய்யவும்
இம்முற்பிறப்புச் செய்தியினை
ஆசிரியர் உத்தியாகக்
கொள்கின்றார்.36
வாய்வ தாக
மானிட யாக்கையில்
தீவினை அறுக்கும் செய்தவம்7
என்ற வரிகளின் வழி, ’மனித உடலால் செய்யப்படும்
பாவங்களைப் போக்குவதற்காகக் கிடைக்கப்பெறும் தவம் கிட்ட’ என்று மணிமேகலை
தன் தாயிடமும்
செவிலித் தாயிடமும்
கூறுகிறாள். இவ்வரிகளில்,
மனிதவுடலால் செய்யப்படும்
பாவங்கள் முக்திக்குத்
தடையாக அமையும்
என்ற கருத்து
புதைந்துள்ளது. அதாவது ஆன்மா இறைவனடி சேர உடலால் செய்யப்பட்ட பாவங்களை
நீக்குவது அவசியமாகும்.
இவ்வாறு குற்றம்
குறைகள் நீங்கிய
மாசற்ற உடலின் ஆன்மா உலக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு எல்லையில்லா
இன்பமான வீடு பேற்றை அடைகின்றது.
இதுவே பகவத் கீதையில்,
எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், வீணாவதற்கு?
எதை
நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை
கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது
இன்று உன்னுடையதோ, நாளை
அது மற்றவருடையது ஆகிறது
மற்றொரு
நாள் அது வேறொருவர் ஆகிறது.
என்று கூறப்படுகின்றது. இவ்வுலகில்
நமக்குச் சொந்தமானதென்று எதுவுமில்லை என்பதை இக்கீதைச் சாரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இதிலிருந்து,
ஓர் ஆன்மாவின்
நிலையான இன்பம் அந்த ஆன்மா முக்தி அடைவதில் தான் உண்டு என்ற உண்மை புரிகிறது.
3. முடிவுரை
:
சுருங்கக்கூறின், உலகிலேயே
மிகவும் கொடுமையான
ஒன்று பசிப்பிணி
என்று கூறினால்
அதை மறுப்பாரில்லை. மானிட வாழ்வின்
மிகப் பெரிய நோய் பசி. இன்று வரை தீர்க்க இயலாத நோயும் இதுதான். ஔவையார்
பசிப்பிணியின் கொடுமையை
இப்படிச் சொல்கிறார்.
மானம் குலம்
கல்வி வன்மை
அறிவுடைமை
தானம் தவம்
உயர்ச்சி தாளான்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திட பறந்து போகும்8
மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றுள்ள பாத்திரம் பெற்ற காதையில், பசிப்பிணியின் கொடுமைகள்
தெளிவாக விளக்கப்பட்டதோடு, அப்பிணியைப் போக்கும்
செயல் மேன்மையானது
என்றும் வலியுறுத்தி
கூறப்பட்டுள்ளது. அதே வேளையில், இக்காதையில் பல அறக்கருத்துகள் இன்றைய வாழ்க்கை முறையோடு நெருங்கிய
தொடர்பு உள்ளதைக்
காண இயலுகிறது.
மணிமேகலை வெறும் காலத்தால் அழியாத காப்பியமாகத்
திகழாமல், இக்காப்பியத்தில் போதிக்கப்பட்டுள்ள அறக்கருத்துகள் இன்றும் நாம் அனைவராலும் பின்பற்றக் கூடியதாகவே
உள்ளன
சீவக சிந்தாமணி அறிமுகம்
சீவக சிந்தாமணி
சோழர்களுடைய
ஆட்சிக் காலத்தில் இயற்றப்பெற்ற காப்பியம் சீவக சிந்தாமணி. இது கி.பி. ஒன்பது
அல்லது பத்தாம் நூற்றாண்டில் தோன்றியது என்பர். சீவக சிந்தாமணிக்கு முன்னர் எழுந்த
பெரிய நூல்கள் எல்லாம் வெண்பாவாலும் அகவலாலும் இயற்றப்பட்டன. ஆனால் முதன்முறையாக ~விருத்தம்| என்ற ஒரு புதுச்செய்யுள்
வகையில் எழுதப்பட்டது சீவக சிந்தாமணி. ~இது வரையிலும் பெரிய நூல்கள் எல்லாம்
வெண்பாவாலும் அகவலாலும் இயற்றப்பட்டு வந்த தமிழிலக்கிய வரலாற்றில், கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில், ஒரு புதுமையைப் புகுத்தியவர்
திருத்தக்கதேவர் என்னும் சைன முனிவர். அவர் சீவகன் என்ற அரசனுடைய வரலாற்றை ஒரு
காப்பியமாகப் பாடியபோது, விருத்தம்
என்ற புதுச் செய்யுள் வகையைப் பயன்படுத்தினார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட
பாட்டுகள் கொண்ட ஒரு பெருங்காப்பியத்தை அந்தப் புதிய செய்யுள் வகையிலேயே முழுதும்
பாடி முடித்தார்| எனப்
பேரா. மு. வரதராசனார் திருத்தக்க தேவரின் சிறப்பினை எடுத்துரைக்கின்றார்.
விருத்தம் என்பது நான்கு அடிகள் உடையது. முதல் அடியில் எத்தனை சீர்கள் வருமோ
அத்தனை சீர்களே பிற மூன்று அடிகளிலும் வரும். முதல் அடியில் அமைந்த சீர்களின்
அமைப்பே அடுத்த அடிகளிலும் அதே முறையில் வரும். அதனால் முதலடியின் ஓசையே பிற
மூன்று அடிகளிலும் திரும்பத் திரும்ப ஒலிக்கும். ஓர் அடிக்கு இத்தனை சீர்கள்
வரவேண்டும், இன்ன
அளவான சீர்கள் வரவேண்டும் என்ற வரையறை இல்லாமையால், விருத்தம் பலவகையாக விரிவு
அடைந்தது. ஒரு விருத்தத்தின் அடிகள் நீண்டு வரலாம்; மற்றொரு விருத்தத்தின்
அடிகள் குறுகி வரலாம். சிறு சிறு சீர்கள் கொண்ட ஒரு விருத்தம் பரபரப்பாகவோ, துடிதுடிப்பாகவோ ஒலிக்கலாம்.
நீண்ட சீர்கள் கொண்ட மற்றொரு விருத்தம் ஆழமுடையதாகவோ, அமைதியுடையதாகவோ, உணர்ச்சி
நீண்டதாகவோஒலிக்கலாம். ஆகவே, விருத்தம்
என்ற பெயர் கொண்ட இது, ஒரு
செய்யுள் வகையாக இருந்தாலும் நூற்றுக்கணக்கான ஓசைவேறுபாடுகளைப் படைத்துக்காட்ட
இடம் தந்தது. தமிழ்க்கவிதையில் ஏற்பட்ட இந்தப் புரட்சியால் உணர்ச்சிக்கு ஏற்றவாறு
கவிதையின்நடையை மாற்றியமைக்கும் வடிவச் சிறப்பு மேலும் வளர்ந்து பெருகத்
தொடங்கியது. பிற்காலத்தில் கம்பர் இதில் பெரும் வெற்றிபெற்றார். சேக்கிழார், கச்சியப்பர் ஆகியோரும் இந்த
யாப்பைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளனர். வடமொழியிலுள்ள ஷத்திர
சூடாமணி, கத்திய
சிந்தாமணி, ஸ்ரீபுராணம்
ஆகிய நூல்களில் உள்ள கதையைத் தழுவிச் சீவக சிந்தாமணி எழுதப்பட்டது. சீவகசிந்தாமணி
கூறும் சீவக மன்னனது வரலாறு, வடநாட்டுச்
சார்பு உடையது. எனினும் தமிழகத்துச் சமூகத்தைப்பின்னணியாகக் கொண்டு
பாடப்பட்டுள்ளது. இந்த நூல் பிற்கால இலக்கிய வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமைந்தது
என்பர். கம்பர், இக்காப்பியத்திலிருந்து, ~ஓர் அகப்பையைமுகந்து
கொண்டார்| என்று
கூறும் மரபு உண்டு. நாடு நகரம் முதலியவற்றை வருணிக்கும் முறையிலும், ஐந்திணையாகப்
பகுக்கப்படும்நிலங்களின் இயற்கை அழகுகளை விளக்கும் முறையிலும், இசை முதலிய கலைகளை விளக்கும்
முறையிலும், சீவக
சிந்தாமணி, காப்பிய
அமைப்பின் முன்னோடியாகச் சிறப்புற்றுத் திகழ்கிறது. காதல் சுவை மிகுந்திருந்தாலும், எண்வகைச்
சுவையும்இக்காப்பியத்தில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. இந்நூலுக்கு நச்சினார்க்கினியர்
சிறந்த உரை ஒன்று எழுதியுள்ளார்.
பெயர்க் காரணம்
~சிந்தாமணி| என்பது தேவர் உலகத்து
மணிகளுள் ஒன்று. வேண்டியோர்க்கு வேண்டியதை வழங்கும் தன்மையுடையது. சிந்தாமணிக்
காப்பியமும் கற்போர்க்கு வேண்டியதை வழங்கும் சிறப்புடையது. சீவகனின் தாயார் முதன்
முதலில் தன் மகன் சீவகனுக்கு இட்டபெயர் சிந்தாமணி. ~சீவ| என்பது பின்னர் ~அசரீரி|யாக ஒலித்ததால் சீவகசிந்தாமணி என்று பெயர்
பெற்றது என்பர்.
நூலின் அமைப்பு
இந்நூல் 13 இலம்பகங்களையும் (இலம்பகம் -
காண்டம் என்பது போன்ற பகுப்பு), 3145 செய்யுட்களையும்
உடையது. நாமகள்இலம்பகம் (379), கோவிந்தையார்
இலம்பகம் (84), காந்தருவ
தத்தையார் இலம்பகம் (358), குணமாலையார்
இலம்பகம் (315), பதுமையார்
இலம்பகம் (246), கேமசரியார்
இலம்பகம் (145) , கனகமாலையார்
இலம்பகம் (339) , விமலையார்
இலம்பகம் (106), சுரமஞ்சரியார்
இலம்பகம் (107), மண்மகள்
இலம்பகம் (225), பூமகள்
இலம்பகம் (51), இலக்கணையார்
இலம்பகம் (221) , முக்திஇலம்பகம்
(547) என்பன 13 இலம்பகங்கள். சீவகசிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்க தேவர்.
இவர் சோழர் குலத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் உரை குறிப்பிடுகின்றது.
இவர், தமிழிலும்
வடமொழியிலும் புலமை உடையவர். இளமையிலேயே சமண சமயத்தைத் தழுவித் துறவுபூண்டவர்.
திருத்தக்க தேவர் சான்றோர்களுடன்
தொடர்புகொள்ளக் கருதி, மதுரைக்குச்
சென்று, அங்கு
சங்கப் புலவர்களோடு கூடி அளவளாவிஇருந்தபோது அங்கிருந்த தமிழ்ப் புலவர்களில் சிலர், ஆருகத சமயத்தைச் சார்ந்தவர்கள்
துறவு முதலியவற்றையே பாடுவார்களே யன்றிக்காமச் சுவைபடக் காப்பியம் பாட இயலாதவர்
என்று கூறினர் என்றும் இதைக் கேட்ட திருத்தக்க தேவர், காமச் சுவையுடன்சிந்தாமணியை
இயற்றினார் என்றும் ஒரு கதை நிலவுகிறது. காப்பியம் செய்யக் கருதிய திருத்தக்க
தேவர், தம் கருத்தினைத்
தம் ஆசிரியருக்குக் கூற, அதற்கு
அவர், திருத்தக்க
தேவரின் புலமையைஅறிய, அப்பொழுது
அங்கே ஓடிய ஒரு நரியைச் சுட்டிக் காட்டி, ~நீங்கள் காவியம் பாடுமுன்னர், இந்த நரியைப் பொருளாக
வைத்துஒரு நூல்இயற்றிக் காட்டுக| என்று கட்டளை இட்டார் என்றும், உடனே தேவரும் ஒரு சிறு நூல்
பாடி அதற்கு ~நரிவிருத்தம்| என்றுபெயரிட்டுத் தம்
ஆசிரியருக்குக் காட்டினார் என்றும் குறிப்பிடுவர். அது நரியின் செயலைக் கொண்டு
நீதியை வற்புறுத்தும் நூல். நூலின்சிறப்பினை அறிந்த ஆசிரியர், ~இனி நீயிர் நினைத்தபடியே
பெருங்காப்பியம் செய்க| என்று
பணிக்க அப்பணியைத் தலைமேற்கொண்டு அக்காப்பியத்திற்குக் கடவுள் வாழ்த்துப் பாடி
வழங்குமாறு வேண்டினார் என்றும், ஆசிரியரும் ~செம்பொன் வரைமேற்பசும்பொன்| என்று தொடங்கும் பாட்டைப்
பாடிக் கொடுத்தார் என்றும், பின்னர்த்
திருத்தக்க தேவர், ~மூவர்
முதலா உலகம்| என்னும்கடவுள்
வாழ்த்தைப் பாடிக் காப்பியத்தைத் தொடங்கினார் என்றும் குறிப்பிடுவர்
04. குணமாலையார் இலம்பகம்
878 சுண்ணம் தோற்றனம் தீம் புனல் ஆடலம்
எண் இல் கோடி பொன் ஈதும் வென்றாற்கு என
வண்ண வார் குழல் ஏழையர் தம்முளே
கண் அற்றார் கமழ் சுண்ணத்தின் என்பவே
879 மல்லிகை மாலை மணம் கமழ் வார் குழல்
கொல் இயல் வேல் நெடும் கண்ணியர் கூடி
சொல் இசை மேம்படு சுண்ண உறழ்ச்சியுள்
வெல்வது சூது என வேண்டி விடுத்தார்
880 இட்டிடையார் இரு மங்கையர் ஏந்து பொன்
தட்டு-இடை அம் துகில் மூடி அதன் பினர்
நெட்டு-இடை நீந்துபு சென்றனர் தாமரை
மொட்டு அன மெல் முலை மொய் குழலாரே
881 சீர் தங்கு செம்பொன் கொடி மல்லிகை மாலை சேர்ந்து
வார் தங்கு பைம்பொன் கழல் மைந்தர் கை காட்ட மைந்தர்
ஏர் தங்கு சுண்ணம் இவற்றின் நலம் வேண்டின் வெம் போர்
கார் தங்கு வண் கை கழல் சீவகன் காண்-மின் என்றார்
882வாள் மின்னு வண் கை வடி நூல் கடல் கேள்வி மைந்தர்
தாள் மின்னு வீங்கு கழலான்-தனை சூழ மற்ற
பூண் மின்னு மார்பன் பொலிந்து ஆங்கு இருந்தான் விசும்பில்
கோள் மின்னும் மீன் சூழ் குளிர் மா மதி தோற்றம் ஒத்தே
883காளை சீவகன் கட்டியங்காரனை
தோளை ஈர்ந்திடவே துணிவுற்ற நல்
வாளை வவ்விய கண்ணியர் வார் கழல்
தாளை ஏத்துபு தம் குறை செப்பினார்
884சுண்ணம் நல்லன சூழ்ந்து அறிந்து எங்களுக்கு
அண்ணல் கூறு அடியேம் குறை என்றலும்
கண்ணில் கண்டு இவை நல்ல கரும் குழல்
வண்ண மாலையினீர் என கூறினான்
885மற்று இ மாநகர் மாந்தர்கள் யாவரும்
உற்று நாறியும் கண்டும் உணர்ந்து இவை
பொற்ற சுண்ணம் என புகழ்ந்தார் நம்பி
கற்றதும் அவர் தங்களொடே-கொலோ
886ஐயனே அறியும் என வந்தனம்
பொய் அது அன்றி புலமை நுணுக்கி நீ
நொய்தில் தேர்ந்து உரை நூல் கடல் என்று தம்
கையினால் தொழுதார் கமழ் கோதையார்
887நல்ல சுண்ணம் இவை இவற்றில் சிறிது
அல்ல சுண்ணம் அதற்கு என்னை என்றிரேல்
புல்லு கோடைய பொற்பு உடை பூம் சுண்ணம்
அல்ல சீதம் செய் காலத்தின் ஆயவே
888வாரம் பட்டுழி தீயவும் நல்ல ஆம்
தீர காய்ந்துழி நல்லவும் தீய ஆம்
ஓரும் வையத்து இயற்கை அன்றோ எனா
வீர வேல் நெடுங்கண்ணி விளம்பினாள்
889உள்ளம் கொள்ள உணர்த்திய பின் அலால்
வள்ளல் நீங்க பெறாய் வளைத்தேன் என
கள் செய் கோதையினாய் கரி போக்கினால்
தெள்ளி நெஞ்சில் தெளிக என செப்பினான்
890கண்ணின் மாந்தரும் கண் இமையார்களும்
எண்ணின் நின் சொல் இகந்து அறிவார் இலை
நண்ணு தீம் சொல் நவின்ற புள் ஆதியா
அண்ணல் நீக்கின் அஃது ஒட்டுவல் யான் என்றாள்
891காவில் வாழ்பவர் நால்வர் உளர் கரி
போவர் பொன் அனையாய் என கைதொழுது
ஏவல் எம் பெருமான் சொன்னவாறு என்றாள்
கோவை நித்திலம் மென் முலை கொம்பு அனாள்
892மங்கை நல்லவர் கண்ணும் மனமும் போன்று
எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள்
வண்டுகாள் மகிழ் தேன் இனங்காள் மது
உண்டு தேக்கிடும் ஒண் மிஞிற்று ஈட்டங்காள்
893சோலை மஞ்ஞை சுரமை தன் சுண்ணமும்
மாலை என்னும் மட மயில் சுண்ணமும்
சால நல்லன தம்முளும் மிக்கன
கோலம் ஆக கொண்டு உண்-மின் என சொன்னான்
894வண்ண வார் சிலை வள்ளல் கொண்டு ஆயிடை
விண்ணில் தூவி இட்டான் வந்து வீழ்ந்தன
சுண்ண மங்கை சுரமைய மாலைய
வண்ணம் வண்டொடு தேன் கவர்ந்து உண்டவே
895தத்தும் நீர் பவளத்து உறை நித்திலம்
வைத்த போல் முறுவல் துவர் வாயினீர்
ஒத்ததோ என நோக்கி நும் நங்கைமார்க்கு
உய்த்து உரை-மின் இவ்வண்ணம் என சொன்னான்
சீவகசிந்தாமணியின் ஆசிpயார் யார்? 2. சீவகசிந்தாமணி எந்த சமயத்தைச் சாரந்தது? 3. சீவகசிந்தாமணி எத்தனை இலம்பகங்களைக் கொண்டது?
4. சீவகசிந்தாமணியில் எத்தனை செய்யுட்கள் இடம் பெற்றுள்ளன?
5. சீவகசிந்தாமணியின் தலைமைக்கதாபத்திரம் யார்? 6. சீவகனின் தாய் பெயார் என்ன? 7. சீவகனின் தந்தை பெயார் என்ன? 8. சீவகசிந்தாமணியில் குறிப்பிடப்படும் நாடு எது? 9. சீவகசிந்தாமணியில் சீவகன் மணந்த எட்டு மகளிரின் பெயர்களை எழுதுக. 10. சீவகனின் நண்பர்கள் பெயர் களை எழுதுக. 11. சீவகனின் வளார்ப்பு தாய் தந்தையின் பெயார்களை எழுதுக. 12. சீவகனை மணப்பதற்காகத் தவம் புரிந்தவள் யார்? 13. சீவகன் பிறந்த இடம் எது? 14. அரசி விசயை எதன் மூலம் அரண்மனை விட்டு வெளியேறினாள்?
15. குணமாலையின் பெற்றோர்
பெயர் என்ன?
குறுவினாக்கள்
1. சீவகசிந்தாமணி நூற்குறிப்பு எழுதுக. 2.
சீவகசிந்தாமணியில் குணமாலையார் இலம்பகத்தின் கதைச்சுருக்கத்தினை எழுதுக.
3. சீவகனின் நண்பா;கள் குறித்து எழுதுக.
4. சீவகன் மீது கட்டியங்காரன் மேற்கொண்ட செயல்களை எழுதுக.
5. சீவகன் பிறப்பின் ரகசியத்தை திருத்தக்கத்தேவா; எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்?
நெடுவினா
1. குணமாலையார் இலம்பகத்தில் திருத்தக்கத்தேவா; கூறியுள்ள கதை நிகழ்வுகளை எழுதுக.
2. குணமாலையார் இலம்பகத்தில் உவமைச்சிறப்புகளை எழுதுக.
3. ஏமாங்கத நாட்டின் இயற்கை வளங்கள் குறித்து திருத்தக்கத்தேவா; கூறியுள்ளவற்றைஎழுதுக.
UNIT 2 அலகு – 2
பெரிய புராணம்
செயற்கு அரிய செய்வர் பெரியர் என்னும் குறள் வரிக்கேற்ப அறுபத்து மூன்று நாயன்மார்கள் புரிந்த இறைப் பக்தியையும், தொண்டு நெறியையும் வரலாற்று முறையில் கூறும் நூலே பெரிய புராணம் (பெரியர் புராணம்) ஆகும். இந்நூல் பல்வேறு நாடு, ஊர், சாதி, தொழில் கொண்ட நாயன்மார்களுடைய வாழ்க்கையை விவரிக்கிறது. அக்காலச் சமுதாய வரலாற்றையும் எளிய, இனிய நடையில் எடுத்து சொல்கிறது. தில்லை அம்பலத்தே ஆடும் சிவபெருமான் உலகெலாம் என்று அடியெடுத்துக் கொடுக்கச் சேக்கிழார், பக்தி வளமும், இறையருட் திறமும் குறைவிலாது சிறக்குமாறு இலக்கியப் பெருங்களஞ்சியமாக, பெரிய புராணத்தை இயற்றி அருளினார்.
காப்பிய அமைப்பு
பெரிய புராணம் என்னும் பெருங்காப்பியம் தமிழகச் சூழலையும்,
63 அடியார் பெருமக்களையும் மையமாகக் கொண்டு திகழ்கின்றது. இந்நூல் பெரும் பிரிவாக இரண்டு காண்டங்களையும், உட்பிரிவாக 13 சருக்கங்களையும் உடையது. 4286 விருத்தப் பாக்களையுடைய ஒரு பெரு நூலாகும். சுந்தரரின் சிறப்பு, அடியார்களின் சிறப்பு, சிவபெருமானின் அருட்திறம், குரு (ஆசிரியன்), இலிங்கம் (இறைவன் திருமேனி), சங்கமம் (அடியார்) ஆகிய முறைகளில் சிவனை வழிபட்ட நிலைகள், தொண்டின் திறம், சாதி, மத, இன வேறுபாடில்லாமல் அடியார் நோக்கில் கண்டு வழிபட்டு முத்தி பெற்ற தன்மைகள், சிவன் அடியார்களை ஆட்கொண்ட விதம் முதலான பல செய்திகளைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது. அடியார்களின் வரலாறும். அவர்கள் கடைப்பிடித்த தொண்டு நெறியும், இறைவன் அவர்களை ஆட்கொண்ட விதமும் இந்நூல் முழுதும் எடுத்துக் கூறப்படுவதால் சேக்கிழார், திருத்தொண்டர் மாக்கதை என்று பெயரிட்டார். செயற்கரிய செயல் புரிந்த அடியார்களின் (பெரியார்களின்) சிறப்பினை உரைப்பதால் இதனைச் சான்றோர்கள் பெரியர் புராணம் என்று கூற காலப் போக்கில் பெரிய புராணம் என்று வழங்கப்பட்டது.
காப்பிய நோக்கம்
கி.பி.11, 12-ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆட்சி செய்த மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழனாவான் (அநபாய சோழன்). அம்மன்னனின் அவையில் முதல் அமைச்சராகப் பணி புரிந்தவர் சேக்கிழார். சோழ மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவனடியார்களின் உயர்ந்த வாழ்க்கையைக் கதைப் பின்னலாகக் கொண்டு பெரிய புராணத்தைப் பாடினார் சேக்கிழார். சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகவும், நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியை வழிநூலாகவும் கொண்டு பெரிய புராணத்தைச் சார்பு நூலாகப் படைத்தார் சேக்கிழார். சிவனை முதன்மைப்படுத்தி வழிபடும் சமயமாகிய சைவத்தையும், அடியார்களது வரலாறு, தொண்டு நிறைந்த வாழ்வு, முத்தி பெற்ற நிலை ஆகியவற்றையும் விரிவாகவும் தெளிவாகவும் புலப்படுத்துவதே பெரிய புராணத்தின் நோக்கம் ஆகும்.
காப்பியச் சிறப்பு
அறுபத்து மூன்று நாயன்மார்களின் புகழ் மிக்க வரலாற்றினை உலகறிய, பக்திச் சுவையோடு விரிவாக எழுதிய பெருமைக்கு உரியவர் சேக்கிழார் ஆவார். அவர் சோழ நாட்டு அமைச்சராக இருந்தமையால் நாட்டின் பல பகுதிகளுக்கும், நாயன்மார்கள் வாழ்ந்த ஊர்களுக்கும் நேரில் சென்று, அவ்விடத்தில் செவிவழி மரபாக வழங்கும் வரலாற்றுச் செய்திகளையும் தொகுத்து இந்நூலை அமைத்தார் என்பர். பிற மொழிக் கதைகளைத் தழுவாமல், தமிழ் மக்களையும், தமிழகச் சூழலையும் மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களைப் போலவே பெரியபுராணம் என்னும் நூல் சிறப்புற்றுத் திகழ்கின்றது. ஆண் பெண் வேறுபாடின்றிப் பல இனங்களையும், தொழில் பிரிவுகளையும் சார்ந்த சிவனடியார்களைப் பற்றிய நூலாக அமைந்துள்ளதால் இந்நூலைத் தேசிய இலக்கியம் என்று சான்றோர்கள் பாராட்டுவர்.
நூலாசிரியர்
சென்னைக்கு அருகிலுள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வேளாளர் மரபில் பிறந்தவர் அருண்மொழித் தேவர். இப்பெயரே அவருக்குப் பெற்றோர் இட்டு வழங்கியதாகும். சேக்கிழார் என்பது இவரது குடிப்பெயராகும். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதால், இரண்டாம் குலோத்துங்க சோழன் அவையில் முதலமைச்சராகப் பணிபுரிந்தார். அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று, அடியார்களின் பெருமையை வரலாறாக எழுதினார். இந்நூலின் பெருமையை உணர்ந்த மன்னன், அவரைப் பட்டத்து யானையின் மீதேற்றி நகர்வலம் செய்து உத்தம சோழப் பல்லவராயன் என்னும் பட்டம் தந்து சிறப்பித்தான். இவருடைய காலம் கி.பி. 12 -ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். சிவத் தொண்டர்களின் வரலாற்றைச் சிறப்பித்த காரணத்தால் இவருக்குத் தொண்டர் சீர் பரவுவார் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. கல்வெட்டுகள் இவரை மாதேவடிகள் என்றும், இராமதேவர் என்றும் சிறப்பிக்கின்றன. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று இவரைப் பாராட்டுகின்றார்.
கண்ணப்ப நாயனார் புராணம்
பெரிய புராணம் என்னும் காப்பியத்துள் 63 நாயன்மார்கள் வரலாற்றில் கண்ணப்பநாயனார் வரலாறு இலைமலிந்த சருக்கத்தில் 10-ஆவது புராணமாக (காதையாக) இடம் பெற்றுள்ளது. இந்நாயனார் வரலாற்றைச் சேக்கிழார், 186 விருத்தப் பாக்களினால் பாடியுள்ளார். திண்ணனார் சிவலிங்கத் திருவுருவத்தின் கண்ணிலிருந்து இரத்தம் கசிந்ததைக் கண்டு, தன் கண்ணைத் தோண்டி அப்ப இறைவனால் கண்ணப்பன் என்று அழைக்கப்பட்ட செய்தியினை இக்கதை விளக்குகின்றது. இக்கதை நிகழ்ந்த இடம் இன்று காளத்தி என வழங்கும் திருக்காளத்தி மலையாகும் (பொத்தப்பி நாடு).
சுந்தரமூர்த்தி சுவாமிகளால் கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர் என்றும், பட்டினத்தாரால் நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன் என்றும், திருநாவுக்கரசரால் திண்ணன், கண்ணப்பன், வேடன் என்றும் பலவாறாகச் சான்றோர்கள் பலரால் கண்ணப்பர் பாராட்டப்படுகிறார்.
கதைச் சுருக்கம்
பொத்தப்பி என்னும் நாட்டில் உடுப்பூர் என்னும் ஊரில் நாகன் என்பவன் வேடர்குலத் தலைவனாக இருந்து மக்களைக் காத்து வருபவன். தத்தை, அவன் மனைவியாவாள். நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறில்லாமல் இருக்கவே, முருகனை வேண்டி விழா எடுத்தனர். அவர்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட முருகன் அருள் புரிந்தான். அவர்களுக்கு அழகான வலிமை மிக்க ஆண்குழந்தை பிறந்தது. நாகன் அக்குழந்தையைத் தன் கைகளால் தூக்கும்போது திண் என்று இருந்தமையால் திண்ணன் என்று பெயரிட்டான். திண்ணன் வளர்ந்து குல மரபிற்கேற்ப வில், அம்பு, ஈட்டி, வாள் முதலான போர்ப் பயிற்சிகளைக் கற்றுச் சிறப்படைந்தான். நாகன் முதுமை காரணமாகத் தன் பதவியினைத் தன் மகனாகிய திண்ணனிடம் தந்து நாடாளும்படி பட்டம் சூட்டினான். இதனைக் கண்டு, தேவராட்டியும் வந்து, நலம் சிறக்க என வாழ்த்திச் சென்றாள். ஒரு நாள் திண்ணன் நாணன், காடன் ஆகிய நண்பர்களோடு வேட்டையாடச் சென்றார்.
வேட்டைக்காக விரித்த வலைகளை அறுத்துக்கொண்டு ஒரு பன்றி மட்டும் ஓடியது. விடாது துரத்திச் சென்று, புதருள் மறைந்த அந்தப்பன்றியைத் திண்ணன் தம் குறுவாளால் வெட்டி வீழ்த்தினார். இதனைக் கண்ட நண்பர்கள் வியந்து, திண்ணனின் வலிமையைப் பாராட்டினார்கள். அருகே ஓடும் பொன்முகலி ஆற்றையும் வானாளாவ நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார் திண்ணன். இதனைக் கண்ணுற்ற நாணன். இம் மலையின் மீது குடுமித் தேவர் இருக்கிறார். அவரைக் கும்பிடலாம் வா என்றான். மலை ஏறும்போது திண்ணனுக்கு மட்டும் புதுவிதமான இன்பமும் உணர்வும் ஏற்பட்டன.
குடுமித் தேவருக்கு, சிவ கோசரியார் என்பவர் ஆகம விதிமுறைப்படி பூசை செய்வதனை நாணன் மூலம் அறிந்தார். மலையேறிய திண்ணன், குடுமித் தேவரைக் கண்டவுடன் அவரை வணங்கியும், கட்டித் தழுவியும் ஆடினார்; பாடினார். நண்பன் காடன் ஆற்றங்கரையில் தீயில் இட்டுப் பக்குவப்படுத்திய இறைச்சியைத் தன்னுடைய ஒரு கையில் எடுத்துக் கொண்டார், மறு கையில் வில் இருந்ததால் வாய் நிறைய ஆற்று நீரையும், அருகில் இருந்த மரத்தின் மலர்களைத் தலையில் செருகியும் கொண்டு வந்தார். குடுமித் தேவருக்குத் திருமஞ்சனமாகத் தன் வாய் நீரையும், அமுதமாகப் பன்றி இறைச்சியினையும் தலையில் சூடிய மலரை வழிபாட்டு மலராகவும் இட்டு மகிழ்ந்தார் திண்ணனார். பின் இரவு முழுவதும் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலையில் குடுமித் தேவருக்குத் திருவமுது தேடி வரப் புறப்பட்டார்.
வழக்கம் போல, பூசை புரிய வந்த சிவ கோசரியார் இறைவன் மீதிருந்த இறைச்சி முதலானவற்றைக் கண்டு வருந்தினார், புலம்பினார். பின் அவற்றை நீக்கித் தூய்மை செய்து பூசனை புரிந்து சென்றார். அடுத்து, திண்ணனாரும் வந்து இறைச்சி முதலானவற்றை வைத்து வழிபட்டார். மறுநாளும் இறைச்சி முதலானவை இருப்பது கண்டு வருந்திச் சிவ கோசரியார் இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான் தோன்றித் திண்ணனாரின் அன்பு வழிபாட்டை நாளை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்று கூறி மறைந்தருளினார். ஆறாம் நாள் திருக்காளத்தி நாதர் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்ட, வலக் கண்ணில் இருந்து உதிரம் பெருகும்படிச் செய்தார். அதனைக் கண்ட திண்ணனார், செய்வதறியாமல் திகைத்தார். பின் தம் கைகளால் துடைத்தாலும் பச்சிலை இட்டாலும் நிற்கவில்லையே என வருந்தி நின்றபோது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது.
உடனே தம் வலக்கண்ணை அம்பினால் அகழ்ந்து எடுத்து அப்பினார். உதிரம் நின்றுவிட்டது. இதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார். சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகும்படிச் செய்தார். தம் இடக்கண்ணையும் பெயர்த்து எடுத்து அப்பினால் உதிரம் நின்றுவிடும் என்று உணர்ந்தார். தம் மறு கண்ணையும் பெயர்த்துவிட்டால் இறைவனின் இடக்கண்ணைச் சரியாகக் கண்டறிய முடியாது என்பதால், அடையாளத்துக்காகத் தம் காலின் பெருவிரலை இறைவனின் உதிரம் பெருக்கும் கண் மீது ஊன்றிக் கொண்டார். அம்பினால் தம் இடக்கண்ணைப் பெயர்க்கத் தொடங்கினார். உடனே காளத்தி நாதர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார். இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவன் அருளில் மூழ்கித் திளைத்தார். அன்று முதல் இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.
குறிப்பு :
பொத்தப்பி நாடு : ஆந்திர மாநிலத்தின் இப்போதைய கடப்பை மாவட்டத்தில் புல்லம் பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.
உடுப்பூர் : இவ்வூர் குண்டக்கல் -அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம்பேட்டைக்கு அருகில் உள்ளது. உடுக்கூர் என இன்று வழங்கப்படுகிறது.
• கதைமாந்தர்
கண்ணப்ப நாயனார் வரலாற்றில் இடம்பெறும் கதை மாந்தர்கள். நாகன், தத்தை, திண்ணன், நாணன், காடன், வேடுவர்கள், தேவராட்டி, குடுமித் தேவர், சிவ கோசரியார்.
இடம் பெறும் நிகழ்ச்சிகள்
நாயனாரின் வாழ்க்கையையும் அதில் ஏற்பட்ட மாற்றத்தையும் விரிவாகக் காணலாம்.
திண்ணனார்
பொத்தப்பி எனும் மலைநாட்டில் உள்ள உடுப்பூர் என்னும் ஊரினை வேடர் குலத் தலைவன் நாகன் என்பான் ஆட்சி செய்து வந்தான். அவன் மனைவி தத்தையாவாள். அவர்களுக்கு நீண்ட காலமாகப் பிள்ளைப் பேறு இல்லாமல் இருக்கவே, முருகனுக்கு விழா எடுத்தனர். அம்முருகனின் அருளால் பிறந்தவனே திண்ணன். திண் என்று இருந்த காரணத்தால் தன் மகனுக்குத் தந்தையாகிய நாகன் திண்ணன் என்று பெயரிட்டான். வேடுவர் குல மரபிற்கு ஏற்ப வில், வேல், ஈட்டி, முதலான ஆயுதங்களைக் கற்றுத் தேர்ந்து கையில் ஏந்தியவன், திண்ணன், அவன் கரிய நிறமுடையவன். உரத்த குரலுடையவன். தலை மயிரைத் தூக்கிக் கட்டியவன். தலையிலே மயிற்பீலி அணிந்தவன். சங்கு மணிகளும், பன்றிக் கொம்புகளும் கோத்த மாலையும், புலித் தோலினால் செய்யப்பட்ட தட்டை வடிவமான வெற்றி மாலையினையும் மார்பிலே அணிந்தவன். இடையிலே புலித் தோல் ஆடையணிந்தவன், குறுவாளையும் வைத்திருப்பவன். கால்களில் வீரக் கழல் பூண்டு, தோல் செருப்பு அணிந்தவன். வேட்டையாடுவதற்கு நாயினைத் துணையாகக் கொண்டவன்.
குடுமித் தேவரைக் காணல்
தந்தை நாகனுக்கு வயது முதிர்ந்தது. அதனால் நாட்டுக்கு இடையூறு விளைவிக்கும் விலங்குகளை வேட்டையாட வேண்டி, தன் மகனை வேடர் தலைவனாக்கினான் நாகன். இதனைக் கண்ட தேவராட்டியும் நலம் சிறக்க எனக் கூறித் திண்ணனாரைப் பாராட்டி வாழ்த்திச் சென்றாள். ஒருநாள் நாணன், காடன் என்னும் இரு நண்பர்களோடு வேட்டைக்குச் சென்றார் திண்ணனார். காட்டில் திரிந்த வலிய பன்றியைத் தம் குறுவாளால் வீழ்த்தினார். அருகில் ஓடும் பொன்முகலி ஆற்றினையும் வானளாவி நிற்கும் காளத்தி மலையையும் கண்டு வியந்தார். நண்பர்கள், "இம்மலையில், குடுமித் தேவர் இருக்கிறார். அவரைக் கும்பிடலாம் வா” என்றார்கள். திண்ணனாருக்கு மலையேறும் போதே புதுவிதமான இன்பமும், உணர்வும் உண்டாயின.
வழிபடல்
மலையேறிய திண்ணனார் பேருவகை கொண்டு ஓடிச் சென்று, காளத்தி நாதரைக் கட்டித் தழுவினார். ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். மேலும் கன்றை ஈன்ற பசுவைப் போலப் பிரிய மனமின்றிச் சுழன்று சுழன்று இறைவனிடமே நின்றார். பின்பு பொன் முகலியாற்றங் கரையினருகில் காடன், தீயில் இட்டு பக்குவப்படுத்திய பன்றி இறைச்சியினைத் தம் வாயினால், சுவையும் பதமும் பார்த்துப் பின் ஒருகையில் அதனை எடுத்துக்கொண்டு, மற்றொரு கையில் வில்லம்பு ஏந்தினார். இறைவனது திருமஞ்சனத்திற்காகப் பொன்முகலியாற்று நீரை வாயில் நிறைத்துக்கொண்டு, பூசனைக்காகப் பூங்கொத்துகளைத் தம் தலையில் செருகிக் கொண்டு, மலையுச்சிக்கு வந்தார். குடுமித் தேவரின் மேல் இருந்த சருகுகளைச் செருப்பணிந்த தம் பாதங்களால் விருப்பமுடன் தள்ளினார். தம் வாயிலிருந்த நீரால் திருமஞ்சனம் செய்தார். தம் தலையில் இருந்த மலர்களைத் திருமுடி மீது சார்த்தி, பன்றி இறைச்சியினைத் திருவமுதாகப் படைத்து மகிழ்ந்தார். குடுமித் தேவருக்கு இரவில் துணை யாருமில்லை என்று எண்ணி, இரவு முழுவதும் அவரே கையில் வில்லேந்திக் காவல் புரிந்தார். காலை புலர்ந்தது. திண்ணனார், காளத்தி நாதருக்குத் திருவமுது தேடிவரப் புறப்பட்டார்.
சிவபிரானின் அருள் வாக்குப் பெறல்
திண்ணனார் சென்றவுடன் வழக்கம் போல் சிவ கோசரியார் பூசை செய்ய வந்தார். மேலுள்ள இறைச்சி முதலானவற்றை நீக்கி ஆகம முறைப்படி பூசை செய்துவிட்டுச் சென்றார். திண்ணனார் முன் போலவே வேட்டையாடி விலங்குகளைத் தீயில் சுட்டு அமுதாக்கிப் படைத்திட வந்தார். தொடர்ந்து, சிவ கோசரியார் வழிபட்டுச் சென்றவுடன், திண்ணனார் வந்து அவற்றை நீக்கி வழிபடுவதும் தொடர்ந்தது. தினமும் சிவன் திருமேனி மீது இறைச்சி இருப்பது கண்டு சிவ கோசரியார் வருந்தினார். மனம் கசிந்து இறைவனிடம் முறையிட்டு வீட்டிற்குச் சென்று உறங்கினார். அவரது கனவில் சிவபிரான், நீ கூறும் மறைமொழிகள் அவன் அன்பு மொழிகளுக்கு ஈடாகாது, நீ வேள்வியில் தரும் அவியுணவைக் காட்டிலும் அவன் தரும் ஊனமுது இனியது என்றும் இந்நிகழ்ச்சியினை மரத்தின் மறைவில் நின்று பார்ப்பாயாக என்றும் கூறினார்.
அவனுடைய வடிவுஎல்லாம் நம்பக்கல் அன்புஎன்றும் அவனுடைய அறிவுஎல்லாம் நமை அறியும் அறிவு என்றும் அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனிய வாம் என்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறிநீஎன்று அருள்செய்தார்.
(பெரி: க.பு.:157)
என்றும் திண்ணனாரின் பக்திச் சிறப்பைச் சிவபிரான் கூறினார்.
கண்ணப்பன் ஆதல்
ஆறாம் நாள், திருக்காளத்திப் பெருமான் திண்ணனார் தம் மீது கொண்டுள்ள அன்பின் பெருமையைக் காட்ட, தமது வலக்கண்ணில் இருந்து உதிரம் பெருகச் செய்தார். இதனைக் கண்ட திண்ணனார் தாம் செய்வதறியாமல் திகைத்தார். பூசைக்காகக் கொண்டு வந்த பொருள்கள் சிதறின. தம் கையால் இரத்தம் கசிவதைத் துடைத்தாலும் நிற்கவில்லை. உடனே பச்சிலைகளைத் தேடிக் கொண்டுவந்து தடுத்துப் பார்த்தார். நிற்கவில்லை. இந்த நிலையில் திண்ணனார் அடைந்த துயரத்தையும், தவிப்புகளையும் சேக்கிழார் உணர்ச்சி மிக்க கவிதையாய் வடித்திருக்கிறார்.
பாவியேன் கண்ட வண்ணம்
பரமனார்க்கு அடுத்தது என்னோ
ஆவியின் இனிய எங்கள்
அத்தனார்க்கு அடுத்தது என்னோ
மேவினார் பிரிய மாட்டா
விமலனார்க்கு அடுத்தது என்னோ
ஆவது ஒன்று அறிகி லேன்யான்
என்செய்வேன் என்று பின்னும்...
(க.புராணம் :174)
(பரமனார், அத்தனார், விமலனார் = சிவபிரானின் சிறப்புப் பெயர்கள்; மேவினார் பிரிய மாட்டா= சேர்ந்தவர்கள் பிரிய இயலாத பேரன்பு கொண்ட)
இனி என்ன செய்வது என்று சிந்தித்து நின்றார். அப்பொழுது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி அவரது நினைவுக்கு வந்தது. உடனே அம்பினால் தமது வலக்கண்ணை அகழ்ந்தெடுத்து, ஐயன் திருக்கண்ணில் அப்பினார். இரத்தம் நின்றுவிட்டது. இதைக் கண்டு மகிழ்ந்து ஆடினார். அடுத்து, சிவபிரான் தமது இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார். அதைக் கண்ட திண்ணனார், 'இதற்கு யான் அஞ்சேன், முன்பே மருந்து கண்டுபிடித்துள்ளேன். அதனை இப்பொழுதும் பயன்படுத்துவேன். எனது இன்னொரு கண்ணையும் அகழ்ந்தெடுத்து அப்பி ஐயன் நோயைத் தீர்ப்பேன்' என்று எண்ணினார். அடையாளத்தின் பொருட்டு, காளத்தி நாதர் திருக்கண்ணில் தமது இடக்காலை ஊன்றிக் கொண்டு, மனம் நிறைந்த விருப்புடன் தமது இடது கண்ணைத் தோண்டுவதற்கென அம்பை ஊன்றினார். குடுமித் தேவர் நில்லு கண்ணப்ப! என்று மூன்று முறை கூறித் திண்ணனாரைத் தடுத்தருளினார். மேலும், என்றும் என் வலப்பக்கம் இருக்கக் கடவாய் என்று பேரருள் புரிந்தார். இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவனருளில் மூழ்கித் திளைத்தார். இறைவனுக்கே தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் அன்று முதல் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.
திருச்சிற்றம்பலம்
1. சைவத் திருமுறைகளில் பெரிய புராணத்தின் இடம் யாது?
விடை : சைவத் திருமுறைகளில் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாகப் போற்றப்படுகின்றது.
2. பெரிய புராணம் பிறமொழி தழுவிய காப்பியமா?
விடை : பெரியபுராணம், தமிழ் மக்களையும், தமிழகச் சூழலையும் மையமாகக் கொண்டு பாடப்பட்ட தமிழ்க் காப்பியமாகும்.
3. பெரிய புராணம் உணர்த்தும் செய்தி யாது?
விடை : எளிய நிலையில் மனம் தளராமல் இறைச் சிந்தனையோடு, தொண்டு புரிந்தால் இறையருள் பெறலாம்' என்னும் செய்தியை 63 நாயன்மார்களின் வரலாற்றைத் கொண்டு உணர்த்தும் நூலே பெரியபுராணம் ஆகும்.
4. சேக்கிழாரை ஆதரித்த மன்னன் யார்?
விடை : சேக்கிழாரை ஆதரித்த மன்னன் இரண்டாம் குலோத்துங்க சோழன் (அநபாய சோழன்) ஆவான்.
5. பெரிய புராணம் இயற்றக் காரணமான நூல்கள் எவை?
விடை : சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியும் பெரிய புராணம் பாடுவதற்குக் காரணமாக அமைந்த நூல்கள் ஆகும்.
6. பெரிய புராணக் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன் யார்?
விடை : பெரியபுராணக் காப்பியத்தின் பாட்டுடைத் தலைவன் சுந்தரர் ஆவார்.
7. திண்ணனாரின் பெற்றோர் யாவர்?
விடை : திண்ணனாரின் தந்தை: நாகன்; தாய்: தத்தை ஆவர்.
8. குடுமித் தேவர் எங்கு வீற்றிருக்கின்றார்?
விடை : பொன்முகலி ஆற்றங்கரையின் அருகில் இருக்கும் திருக்காளத்தி மலையில் குடுமித் தேவர் வீற்றிருக்கின்றார்.
9. சிவ கோசரியாருக்கும், திண்ணனாருக்கும் உள்ள வழிபாட்டு நிலை வேறுபாடு யாது?
விடை : சிவ கோசரியாரின் வழிபாடு ஆகம முறைப்படி செய்வதாகிய அறிவு வழிப்பட்டது-சடங்கு வழியான வைதிக நெறி, ஆனால் திண்ணனாரின் வழிபாடு அன்பு செலுத்துதல் ஆகிய உணர்வு வழிப்பட்டது-பக்தி நெறி, இறைவனுக்கு விருப்பமானது.
10. திண்ணனாருக்கு எத்தனை நாட்களில் இறைவன் காட்சி தந்தார்?
விடை : ஆறே நாட்களில் இறைவன் திண்ணனாருக்குக் காட்சி தந்தார்.
11. திண்ணனாரின் தோற்றச் சிறப்புப் பற்றிக் குறிப்பிடுக.
விடை : வேட்டுவர் குலத் தோன்றல் திண் என்னும் உடலைப் பெற்றதால் திண்ணன் எனப் பெயர் பெற்றார். தலைமயிரைத் தூக்கிக் கட்டியவர். தலையிலே மலர்களைச் சூடியவர். கழுத்திலே சங்கு மணிகளும், பன்றிக் கொம்புகளும் கோத்த மாலையையும், புலித் தோலினால் செய்யப்பட்ட தட்டை வடிவமான வெற்றி மாலையினையும் அணிந்தவர். இடையிலே ஆடையாகப் புலித் தோலையும், குறுவாளையும் வைத்திருப்பவர். கால்களில் வீரக் கழல் பூண்டு செருப்பு அணிந்தவர். தலையிலே மயிற்பீலி சூடியவர். வில், வேல், அம்பு, வாள், ஈட்டி முதலானவற்றைக் கையிலே ஏந்தியவர். வேட்டையாடுவதற்கு நாயினைத் துணையாகக் கொண்டவர்.
12. திண்ணனாருக்கு, கண்ணப்பர் எனப் பெயர் வரக் காரணம் என்ன?
விடை : சிவ கோசரியாருக்கு, இறைவன் திண்ணனாரின் அன்பின் பெருமையைக் காட்ட, தமது வலக்கண்ணில் இருந்து உதிரம் பெருகச் செய்தார். இதனைக் கண்ட திண்ணனார் தாம் செய்வது அறியாமல் திகைத்தார். பின்னர் துடைத்தாலும், பச்சிலையிட்டாலும் நிற்காதது கண்டு வருந்தி நின்றார். அப்போது ஊனுக்கு ஊன் என்ற பழமொழி நினைவுக்கு வர, தன் கண்ணையே அம்பினால் அகழ்ந்தெடுத்து அப்பினார்.
உதிரம் நின்றது. அது கண்டு மகிழ்ந்தாடினார். உடனே, சிவபிரான் இடக்கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தார். உடனே அஞ்சாமல் இடது கண்ணையும் அப்ப, காளத்தி நாதரின் திருக்கண்ணில் தமது இடக்கால் விரலை ஊன்றி, அம்பினால் இடக்கண்ணைத் தோண்ட முனைந்தார், குடுமித் தேவர் நில்லு கண்ணப்ப என்று மூன்று முறை கூறித் தடுத்தருளினார். இதனைக் கண்ட சிவ கோசரியார் தம்மை மறந்து சிவனருளில் மூழ்கித் திளைத்தார். அன்று முதல் இறைவனுக்கே தன் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார், கண்ணப்பர் என்று அழைக்கப்பட்டார்.
கம்ப இராமாயணம் - 14. திருவடி தொழுத படலம்
அனுமன் இலங்கையைக் கடந்துசென்று தன் நண்பர்களைப் பழைய இடத்தில் சந்தித்தபோது நிகழ்ந்தவை குறித்து அறிந்துகொள்வோம்.
இலங்கையை எரியூட்டியபின்பு சீதையை மீண்டும் சந்தித்து அவள் பத்திரமாக இருக்கின்றாள் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்ட அனுமன், இலங்கையின் அருகிலிருந்த ’அரிஷ்டம்’ என்ற குன்றிலேறி வான்வழியே விரைந்துசென்று மகேந்திர மலையில் தனக்காகக் காத்திருந்த தோழர்களைச் சந்தித்தான்.
அனுமன் கடல்தாவி இலங்கை சென்றதை மிக விரிவாய்ப் பாடிய கவிச்சக்கரவர்த்தி, அவன் மீண்டும் தன் பழைய இடத்திற்குத் திரும்பிவந்த நிகழ்வை வளர்த்தாமல் இரண்டே பாடல்களில் சொல்லி முடித்துவிடுகின்றார்.
எவற்றை விரிவாய்ச் சொல்லவேண்டும்; எவற்றைச் சுருங்கச் சொல்லவேண்டும் எனும் கதையமைப்புத் திறனில் அவருக்கிருக்கும் புலமையை இது புலப்படுத்துகின்றது.
இலங்கை சென்ற அனுமனின் நிலையென்னவோ எனும் கலக்கத்தோடும் அச்சத்தோடும் மகேந்திர மலையில் காத்திருந்த வானரர்கள், அவன் வரவைக் கண்டதும் கூட்டிலிருந்த பறவைக் குஞ்சுகள் வெளியில் சென்ற தம் தாயின் வரவைக் கண்டதுபோல் உவகையுற்றனர்.
…பாய்வரு நீளத்து ஆங்கண் இருந்தன பறவைப் பார்ப்புத்
தாய் வரக்கண்டதன்ன உவகையின் தளிர்த்தார் அம்மா. (கம்ப: திருவடி தொழுத படலம் – 6009)
அங்கதன், சாம்பவான் முதலியோரையும் ஏனைய வானரர்களையும் அவரவர்க்கு ஏற்றவகையில் வணங்கிய அனுமன், சீதை அவர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவிக்கச் சொன்னதைத் தெரிவித்தான்.
வானரர்கள் அனைவரும் இலங்கையில் நிகழ்ந்தவற்றை உரைக்கச் சொல்லி அனுமனிடம் கேட்கவே, அங்கே தான் சந்தித்த சீதாப் பிராட்டியின் கற்பொழுக்கத்தின் சிறப்பையும், அவள் இராமனிடம் அடையாளமாய்க் காட்டச்சொல்லிக் கொடுத்த சூடாமணியைப் பற்றியும் குறிப்பிட்ட அனுமன், தான் அங்கு அரக்கர்களோடு போர்புரிந்து பெற்ற வென்றிகள் குறித்தோ, இலங்கையை எரியூட்டிய தன் திறன் குறித்தோ ஏதும் சொல்லாது விடுத்தான் தற்புகழ்ச்சிக்கு நாணி!
ஆண்தகை தேவி உள்ளத்து அருந்தவம் அமையச் சொல்லி
பூண்டபேர் அடையாளம் கைக்கொண்டதும் புகன்று போரில்
நீண்டவாள் அரக்கரோடு நிகழ்ந்ததும் நெருப்புச் சிந்தி
மீண்டதும் விளம்பான் தான்தன் வென்றியை உரைப்ப வெள்கி. (கம்ப: திருவடி தொழுத படலம் – 6015)
தற்புகழ்ச்சியில் திளைப்பது அற்பர்கள் குணம்; நற்குணமும் நல்லறிவும் பெற்ற சான்றோர் அதனை விரும்புவதில்லை என்பதற்கு அனுமனின் அடக்கம் சான்றாய் அமைகின்றது.
அனுமன் தன்னுடைய பெருமையைத் தானுரைக்க விழையாவிடினும் அவன் உடலில் காணப்பட்ட புண்களும், இலங்கை நகரிலிருந்து எழுந்த புகையும் அங்கு நிகழ்ந்தவற்றை வானரர்களுக்குத் தெளிவாய் உணர்த்திவிட்டன.
இலங்கை நிகழ்வுகளை இராமனிடம் விரைவில் உரைக்கவேண்டும் எனும் எண்ணத்தோடு வானரர்கள் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு கிட்கிந்தை வந்தனர். அங்குள்ள மதுவனம் எனும் சோலையை அடைந்தவர்கள், அலுப்புத்தீர தேனுண்டு களித்தனர்; களிப்பு மிகுதியில் அச்சோலைக்குச் சேதம் விளைவிக்கவும் தொடங்கினர். அதனையறிந்த அவ்வனத்தின் காவலன் ததிமுகன் என்பவன் தன் சேவகர்களோடு அங்குவந்து அங்கதன் உள்ளிட்ட வானரர்களோடு சண்டையிட்டான். அங்கதனும் அவனுடைய சேனையும் ததிமுகனையும் அவனுடைய சேவகர்களையும் கடுமையாய்த் தாக்கி விரட்டிவிட்டு அங்கேயே இளைப்பாறிக் கொண்டிருந்தது.
வானரர்கள் சோலையில் இளைப்பாறிக் கொண்டிருக்கட்டும். நாம் இராம இலக்குவரின் தற்போதைய நிலையென்ன என்பதை அறிந்துவருவோம் புறப்படுங்கள்!
சீதையின் பிரிவால் வாடிக்கொண்டிருந்த இராமனைக் கதிர் மைந்தனாகிய சுக்கிரீவன் நம்பிக்கை மொழிகள் சொல்லித் தேற்றிக்கொண்டிருக்கின்றான். அம்மொழிகளால் இராமனும் சிறிது மனம்தேறியவனாய்க் காணப்பட்டான். வடக்கு கிழக்கு மேற்கு திசைகளில் சீதையைத் தேடிச்சென்ற வானரர்கள் சீதையைக் காணாது திரும்பிவிட்டமை வருத்தத்தைத் தந்தாலும், தென்திசை சென்ற திறலுடை அனுமனிடமிருந்து நல்ல செய்தி வரும் என்ற எதிர்பார்ப்பே அவன் உயிரைப் பிடித்து வைத்திருந்தது.
எனினும், குறித்த கெடு தாண்டியும் தென்திசைச் சென்றோர் திரும்பாமை இராமனுக்குக் கவலையையும் அளிக்கவே, அவர்களுக்கு என்னவாயிருக்கக் கூடும் என்பது குறித்த தன் ஐயங்களைச் சுக்கிரீவனிடம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தான். அப்போது குருதிவழியும் முகத்தோடு அங்கு வந்த ததிமுகன், அங்கதனும் அவனுடைய சேனையும் மதுவனத்தில் நுழைந்து அட்டகாசம் செய்ததையும் தட்டிக்கேட்கச் சென்ற தன்னையும் தன் சேவகர்களையும் தாக்கியதையும் சுக்கிரீவனிடம் வருத்தத்தோடு தெரிவித்தான்.
அதுகேட்ட சுக்கிரீவன், ”தென்திசைச் சென்றவர்கள் சீதையைக் கண்டு திரும்பியிருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சித் திளைப்பில்தான் மதுவனத்தில் அவர்கள் இவைபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும்” எனும் தன் ஊகத்தை இராமனிடம் வெளிப்படுத்திவிட்டுத் ததிமுகனை நோக்கி, ”மகிழ்ச்சியில் அவர்கள் செய்த இச்செயல்களைப் பெரிதுபடுத்த வேண்டா; அத்தோடு, வாலி சேயான அங்கதனின் அரசல்லவா இது? எனவே, அவனைத் தண்டித்தல் முறையாகா! அவனிடம் நீ சரணடைதலே சரியானது!” என்றுகூறித் ததிமுகனைத் திருப்பியனுப்பினான்.
திரும்பிவந்த ததிமுகன் அங்கதனைத் தொழுது வணங்கவே, அவர்களுக்குள் பிணக்கம் தீர்ந்து, இணக்கம் பிறந்தது. இனியும் தாமதித்தல் சரியில்லை என்றுணர்ந்த வானரர்கள் அனுமனை இராமனிருக்கும் இடத்திற்கு முதலில் அனுப்பினர்.
கீழ்த்திசைச் சூரியன் தெற்கிலிருந்து வருவதுபோன்ற ஒளியோடு தென் திசையிலிருந்து இராமனை நோக்கி வந்தான் வன்திறல் அனுமன். வந்தவன், இராமனைத் தொழுதானா என்றால் இல்லை! ”தாமரை மலரினின்று நீங்கிய தையலான சீதாப் பிராட்டியை அவளிருக்கும் தென்திசை நோக்கிய தலையையும் கைகளையும் உடையவனாய்த் திரும்பி, நிலத்தில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கி அவளை வாழ்த்தினான்” என்கிறார் காப்பியக் கவிஞர் கம்பர்.
எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்தன்
மொய்கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலையன் கையினன்
வையகம் தழீஇநெடிது இறைஞ்சி வாழ்த்தினான். (கம்ப: திருவடி தொழுத படலம் – 6028)
சீதை, கற்புத் திண்மையுடன் இலங்கையில் இருக்கிறாள் என்பதை உணர்த்தவே அறிவிற் சிறந்த அனுமன், இராமனைக் கண்டவுடன் அவனைத் தொழாது சீதையிருந்த திக்கில் வீழ்ந்து வணங்கினான் என்பதே அவன் செய்கை உணர்த்தும் உட்பொருள்.
எனவே, ’திருவடி தொழுத படலம்’ எனும் தலைப்பு அனுமன் சீதையின் திருவடியைத் தொழுதமையையே குறிக்கின்றது என்று நாம் பொருள்கொள்ளவே கம்பரின் இப்பாடல் இடமளிக்கின்றது.
அனுமனின் செய்கையால், ”அனுமன் சீதையைக் கண்டிருக்கின்றான்; அவள் கற்புத்திறனும் சிறப்பாகவே இருக்கின்றது” என்பதை உய்த்துணர்ந்து உவகைகொண்டான் இராமன்.
வந்தவுடன் வளவளவென்று பேசாமல் குறிப்பிலேயே தான் கொண்டுவந்திருக்கும் நற்செய்தியை உணர்த்தியது அனுமனின் மதிநுட்பம்; அந்தக் குறிப்பை உடனே உணர்ந்துகொண்டது இராமனின் நுண்ணறிவு.
இராமனின் மனம் கொந்தளிப்பு நீங்கி அமைதிகொண்ட நிலையில், அவனிடம் இலங்கையில் நிகழ்ந்தவற்றை உரைக்கத் தொடங்குகின்றான் அனுமன்.
”தேவர்களுக்குத் தலைவனே! கற்பினுக்கு ஓர் அணிகலனாய்த் திகழ்கின்ற பிராட்டியைத் திரைகடல்சூழ் இலங்கை நகரில் என் கண்களால் கண்டேன்; இனி, பிராட்டியின் நிலைகுறித்த ஐயத்தையும் இதுவரை நீ கொண்டிருந்த துயரத்தையும் துறப்பாய்!” என்றான் அனுமன்.
கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்
தெண்திரை அலைகடல் இலங்கைத் தென்நகர்
அண்டர் நாயகஇனி துறத்தி ஐயமும்
பண்டுள துயரும் என்று அனுமன் பன்னுவான். (கம்ப: திருவடி தொழுத படலம்: 6031)
இப்பாடலில் பயின்று வந்துள்ள ’கண்டனென்’ என்ற சொல் ’த்ருஷ்டா ஸீதா’ என்ற வான்மீகத்தின் தொடரைத் தழுவியது. எனினும், அதனை அடுத்துள்ள ’கற்பினுக்கு அணியை’ என்ற கம்பரின் சொல்லாடல், ‘ஸீதா’ எனும் மூலநூலின் சொல்லைவிட ஆழ்ந்த நுணுக்கமான பொருளை உணர்த்துவதாய் அமைந்துள்ளது.
”ஐய! தவம் என்பது செய்த தவத்தின் வடிவமாய்த் திகழும் தையலான சீதை, கடலிடையுள்ள இலங்கை எனும் பெரிய நகரின் ஒருபுறத்தில் விண்ணை அளாவி நிற்பதும் காலை மாலை எனும் வேறுபாடின்றி ஒரேவிதமாய் விளங்குகின்ற பொன்மயமான கற்பகத் தருவை உடையதுமான ஒரு பூஞ்சோலையினுள்ளே உன் தம்பி இலக்குவன் புற்களைக் கொண்டு வேய்ந்து அமைத்த தூய்மையான அதே பன்னசாலையில் தங்கியிருந்தாள்” என்றுரைத்தான் அஞ்சனையின் அரும்புதல்வன்.
வேலையுள் இலங்கை என்னும் விரிநகர் ஒருசார் விண்தோய்
காலையும் மாலைதானும் இல்லதுஓர் கனகக் கற்பச்
சோலை அங்குஅதனில் உம்பி புல்லினால் தொடுத்த தூய
சாலையில் இருந்தாள்ஐய தவம் செய்த தவம்ஆம் தையல். (கம்ப: திருவடி தொழுத படலம் – 6037)
வான்மீகத்தில் இராவணன் சீதையைத் தொட்டுத் தூக்கிச் செல்வதாய்க் கதை அமைந்திருக்கும். ஆனால், கம்பநாடர் தம் காப்பியத்தில் அவ்வாறு அமைக்காது, பன்னசாலையுடனேயே இராவணன் சீதையைத் தூக்கிச் செல்வதாய்த் தமிழ்மரபுக்கு ஏற்றவகையில் காப்பியத்தை மாற்றியமைத்திருந்தமையை முன்னரே கண்டோம். அந்தப் பன்னசாலையிலேயே சீதையை இராவணன், அசோகவனத்தில், சிறை வைத்திருந்தான் எனும் வகையில் காப்பியத்தைத் தொடரும் கம்பர், அச்செய்தியை அனுமனின் சொற்கள் வாயிலாக இராமனுக்கு மட்டுமல்லாது காப்பியத்தைக் கற்கின்ற ஏனையோர்க்கும் ஈண்டு அறியத் தருகின்றார்.
தொடர்ந்து பேசிய அனுமன், ”கற்பிற் சிறந்த பெண்ணொருத்தி தன் கண்களில் உயரிய காதலைத் திரட்டி வைத்துக்கொண்டு, உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற செல்வத்தைப் பெற்ற நீயே உலகில் ஆடவர் பெறவேண்டிய செல்வத்தை முழுதாய்ப் பெற்றவன் ஆனாய்!” என்று இராமனைப் பாராட்டுகின்றான்.
மாண்பிறந்து அமைந்த கற்பின் வாணுதல் நின்பால் வைத்த
சேண்பிறந்து அமைந்த காதல் கண்களின் தெவிட்டி தீராக்
காண்பிறந் தமையால் நீயே கண்அகன் ஞாலம் தன்னுள்
ஆண்பிறந்து அமைந்த செல்வம் உண்டனை யாதி அன்றே. (கம்ப: திருவடி தொழுத படலம் – 6043)
மணமான ஆடவனொருவன் தன் மனையாட்டியின் காதலை முழுமையாய்ப் பெறுவதே அவன் பெறும் பேறுகளில் பெரிய பேறு எனும் அரிய கருத்தை மாணியான அனுமன் வாயினால் இங்குச் சொல்லவைத்த கம்பரின் சிந்தனை நம்மைச் சிலிர்க்கவைக்கின்றது.
”நான் தங்களின் கணையாழியை அடையாளமாய்ச் சீதையிடம் கொடுத்தபோது அதுகண்டு நெகிழ்ந்தவள், அதனை மார்புறத் தழுவிக்கொண்டாள்” என்ற அனுமன், “இன்னும் ஒரு மாதம்வரை நான் பிழைத்திருப்பேன்; அதன்பின்னரும் என்னை மீட்க இராமன் திருவுளம் இரங்கவில்லையாயின் உயிர்துறப்பேன்” என்று சீதை சொல்லச் சொன்னதையும் மறவாது இராமனிடம் செப்பினான்.
இவ்வாறு இருபத்தொரு பாடல்களில் தான் இலங்கையில் சீதையைத் தேடிக் கண்டடைந்தமை, சிறையிருந்த சீதையின் கற்புத்திறம், அவளுரைத்த செய்திகள் ஆகியவற்றை இராமன் மனங்கொள்ளும் வகையில் விளங்கவுரைத்த சொல்லின் செல்வனான அனுமன், பின்பு தன் ஆடையில் முடிந்து வைத்திருந்த ஒளி உமிழும் சூடாமணியை எடுத்து, சீதை தந்த அடையாளமாய், இராமனிடம் காட்டினான்.
அந்தச் சூடாமணியைத் தன் அங்கையில் வாங்கியபோது மணநிகழ்வின்போது நங்கை சீதையின் கையைப் பற்றிய உணர்ச்சியை அடைந்தான் இராமன். அவன் உரோமங்கள் சிலிர்த்தன; கண்கள் நீரைப் பொழிந்தன; மார்பும் தோள்களும் பூரித்தன.
அப்போது அங்கதன் முதலிய இதர வானரர்களும் இராமனிடம் வந்துசேர்ந்தனர்.
”சீதையை மீட்கும் பணிக்கு எழுக!” என்று தன் படைகளுக்கு ஆணையிட்டான் சுக்கிரீவன். வெள்ளத்தனைய மிகுபடை கிட்கிந்தையிலிருந்து புறப்பட்டது. அனுமனின் வேண்டுகோளின்படி அவன் தோளில் இராமனும், அங்கதன் விருப்பப்படி அவன் தோளில் இலக்குவனும் ஏறிக்கொள்ள, வானர சேனை அணிவகுத்துத் தென்திசை நோக்கிப் பயணித்துக் கடலைச் சென்றடைந்தது.
சீறாப்புராணம் -உடும்பு பேசிய படலம்
. முகமது நபியின் வருகை
முகமது நபி அவர்களுடன் உமறு கத்தாப் என்ற வள்ளலும் தீன் என்ற இஸ்லாம் மார்க்கத்திற்கு உடையவர்கள் ஆனபின், இஸ்லாமியர்கள் யாவரும் தைரியமுடையவர்களாய், மகிழ்ச்சி அடைந்தனர். முகமது நபியை இஸ்லாமியர்கள் அனைவரும் தங்களின் ஜீவனைப் போல் விரும்பினர். முகமது நபி, உமறு கத்தாப், அபுபக்கர் ஆகியோர்கள் மக்கா நகரத்திற்கு வெளியே சென்று ஒரு சோலையின்கண் தங்கியிருந்தார்கள்.
நபிகளை இயற்கை வணங்குதல்
அப்போது முகமது நபியின் சரீர அழகைப் பார்த்து அங்குள்ள கற்களும், மரங்களும் காடுகளும், பறவைகளும், விலங்கினங்களும் காட்டில் பாய்ந்துத் திரியும் உயிரினங்களும் முகமது நபியைப் போற்றி சலாம் சொல்லி நின்றன. முகமது நபி அவர்கள் அன்று தங்கள் கூட்டத்தை விட்டு நீங்கி மறுநாள் வேலை கையில் ஏந்திய இஸ்லாமியர்கள் சூழ்ந்து வர தன்னுடலிலிருந்து ஒளி பிரகாசிக்க வேறு ஓர் இடத்தில் சென்று தங்கினார்கள்.
வேடன் உடும்பைப் பிடித்தல்
அப்போது வில்லையும் வலையையும் உடையவனான வேறு ஒரு வேடன் தனது கையில் தடியுடன் காட்டில் சென்றான். வேடன் காட்டில் அலைந்து திரிந்தும், கற்களைத் தள்ளியும் மான் கூட்டங்கள் தடைபடும் வண்ணம் வலைகளைக் கட்டியும் மலைகளின் குகைகளிலும் தேடிப் பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவன் சோலைகளில் தேடிய போது ஒரு பொந்தில் ஒரு உடும்பானது புகுவதைப் பார்த்து அவ்வுடும்பை வலையிடத்தில் பிடித்து, கல் உடையும் வண்ணம் அடித்து தனது மார்போடு பிடித்தான்.
வேடன் நபிகளைக் கண்டு வியத்தல்
அவ்வாறு பிடித்த இவ்வுடும்பை அவ்வேடன் வலையில் கட்டி மனம் மகிழ்ச்சியோடு முட்கள் தங்கிய காடுகளையும் பாறைகளையும் தள்ளி நடந்து வந்தபோது இஸ்லாமியர்கள் நடுவில் நாயகம் முகமது நபி அவர்களைக் கண்களால் பார்த்தான். அவன், அறிவையுடையவர்களான இஸ்லாமியர்களின் நடுவில் வருவது என்ன காரணம்? மேலும் இவருக்குத் தொழில் யாது என்று நினைத்து அவ்வேடன், தங்கியிருந்த இஸ்லாமியர்களிடம் கேட்க அதற்கு அவர்கள் இவர் யாவற்றிற்கும் முதன்மையான நன்மை பொருந்திய முகமது நபி என்று கூறினர்.
முகமது நபி – வேடன் உரையாடல்
அதைக் கேட்ட வேடன், முகமது நபியின் முன்னர் வந்து நின்று ‘நீங்கள் எந்த வேதத்திற்கு உரித்தானவர்? நீங்கள் அழகாய் நடத்துவது எந்த மார்க்கம்? அவற்றை எனக்குத் தெளிவாகக் கூறுங்கள்’ என்று கேட்டான். முகமது நபி வேடனைப் பார்த்து “அழகான வேடனே, நான் இந்த உலகத்திற்குக் கடைசியாக வந்த நபி, எனக்குப் பிறகு இனிமேல் இந்த பூமியில் நபிமார்கள் யாரும் இல்லர். எனது வார்த்தையைப் பின்பற்றி தீன் என்ற இஸ்லாமிய மார்க்கத்தில் நின்றவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள். இந்த வார்த்தைகளைக் குற்றமென்று சொல்பவர்கள் அக்கினி குழிகளையுடைய நரகத்தில் விழுந்து மயங்குவார்கள் என்றார். ஆதலால் இதனை நன்மை என்று உனது மனதில் நினைத்து என் நாவினில் சொல்லும் கலிமாவை ஓதி, துரோகத்தை இல்லாமல் செய்து நல்ல பதவியை அடைவாய்” என்று முகமது நபி கூறினார்.
வேடன் முனகது நபியைப் பார்த்து ‘நான் உங்களின் வார்த்தைகளை மறுக்கவில்லை. எனக்கு நீங்கள் தான் நபி என்று சொல்லும்படியாக மெய்யான சாட்சி வேண்டும்’ என்று கேட்டான்.
அதைக் கேட்ட முகமது நபி அவர்கள் ‘இந்த பூலோகத்தில் உள்ள படைப்புகளில் குறைபாடற்ற சாட்சியாக நீ கேட்பது யாது?” என்று கேட்டார்கள். அவ்வாறு கேட்ட முகமது நபியைப் பார்த்து வேடன் “காட்டில் அகப்பட்ட ஒரு உடும்பு என்னிடம் உள்ளது. அந்த உடும்பு கூர்மையான பற்களைக் கொண்ட தன் வாயைத் திறந்து உங்களுடன் பேசினால் அதன் பின் நான் மறுத்து சொல்ல மாட்டேன்” என்று கூறினான்.
முகமது நபி அவர்கள் நல்லதென்று சிரித்து, மலைகளில் திரிந்து நிற்கும் அந்த உடும்பைக் கூட்டமுள்ள இந்தச் சபையில் விடுவாயாக என்று கூறினார். வேடன், தேன் வழிகின்ற மலர் மாலையை உடையவர்களே, நான் இந்த உடும்பைப் பிடிப்பற்குக் காட்டின் கண் திரிந்து மிகவும் இளைத்து இரண்டு கால்களும் தளர்ச்சியடைந்தேன். இதை அவிழ்த்து விட்டால் எளிதில் நம்மிடத்தில் வராது. அதனால் அதை என் மடியில் இருக்கும்படி செய்தேன்” என்று கூறினான்.
நபிகள் நாயகம் “உனது உடும்பைத் தூக்கி எனது இடத்தின் முன்பு விட்டால், அவ்வுடும்பானது அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லாது” என்று கூறினார். உடனே அந்த வேடன் தன் மடியில் நிற்கும் அவ்வுடும்பைக் கீழே விட்டான். அவ்வாறு விட்டவுடன் அவ்வுடும்பானது நெடிய தனது தலையைத் தூக்கி வாலை நிமிரும்படி செய்து முள்ளைப் போன்ற தன்னுடைய நகங்களை பூமியில் பதித்து ஊன்றி, எள்ளிடும் அளவுள்ள இடமாக இருப்பினும் நீங்கிச் செல்லாது முகமது நபியை மனத்தால் பார்த்து தெளிந்தது.
நபிகள் நாயகம் – உடும்பு உரையாடல்
அவ்வாறு பார்த்த உடும்பை நோக்கி முகமது நபி அவர்கள், அமிழ்தம் போன்ற வார்த்தைகளையுடைய அருமையான தங்களின் வாயைத் திறந்து உடும்பை அழைத்தார். அவ்வுடும்பானது கண்களைத் திறந்து நபியைப் பார்த்து பிளவுடைய தன் நாக்கைத் தூக்கி பதில் பேசிற்று.
“இம்மை, மறுமை என்று சொல்லும் இரண்டும் வருவதற்கு முன்னரும், பல யுகங்களும் தோன்றும் முன்னர் தோன்றிய நபிமார்களுக்கெல்லாம் பின்னர் இவ்வுலகத்தின் கண் அவதரித்து மூன்று உலகங்களையும் துதிக்கும் வண்ணம் தகுதியான நீதியை உடையவர்களே!
தேவர்கள் வணங்கும் தங்களின் பாதங்களை தினமும் வணங்கி இரண்டு கண்களிலும் தலையின் மீதும் பொருந்திய வண்ணம் பற்றினேன், சிறிய அடியேனான நான் ஈடேறும்படி தங்களின் வாயைத் திறந்து என்னை அழைத்ததற்கான காரணத்தைக் கூறுங்கள்” என்றது.
உடும்பைப் பார்த்து முகமது நபி “நீ யாரை மாறாது வணங்குகின்றாய்? என்பதை வேறுபாடு இல்லாமல் சொல்” என்று கேட்டார். உடனே அவ்வுடும்பானது, “வள்ளலே, நான் வணங்குகின்ற நாயகன் ஏகன். அவனுடைய அழகிய மேலான சிம்மாசனமானது வானுலகத்தில் இருக்கும். அவனது ஆட்சி பூமியிலும் இருக்கும். ஒப்பில்லாத பெரியவனான அல்லாவைத் துதித்து நான் வணங்கியது சத்தியம்” என்று சொல்லிற்று.
முகமது நபி உடும்பு பேசியதைக் கேட்டு ‘நீ தருமத்துடன் சொன்னாய். ஆனால், என்னை யார் என்று மதித்தாய்?’ என்று கேட்டார். உடனே உடும்பு தனது இரட்டை நாக்குகளைத் தூக்கி பின்வருமாறு சொன்னது.
“கடல், ஆகாயம், பூலோகம், மலைகள், சூரியன் மற்றும் யாவையும் தங்கள் ஒளியில் உள்ளன. சத்தியமாய் யாவற்றுக்கும் முதன்மையாய் விளங்குகின்ற அல்லாவின் அழகிய தூதர்களில் இந்த பூமியில் வந்த நபிமார்களில் பிரகாசித்து நிற்கும் மேன்மை உடையவர் நீர்.
கடைசியில் வந்த நபியானவர் நீங்கள். இப்பூமியில் தங்களுடைய வாக்கினால் சொல்லிய மார்க்கமே மார்க்கம். அதனைக் குற்றமறத் தெரிந்தவர்கள் சொர்க்கலோகத்தை அடைவார்கள். குற்றம் என்று கூறுபவர்கள் நரகலோகத்தில் விழுவார்கள்.
என்னுடைய காட்டிலுள்ள சாதிகள் எல்லாம் தங்களின் திருநாமத்தை உடைய கலிமாவைத் துதிக்கின்றன. மிகுந்த புகழ் பெற்ற உண்மையான நன்மை பெற்ற நபிகள் நீங்களே. இவ்வுலகத்தில் வேறு நபிமார்கள் இல்லை” என்று உடும்பு சொல்லிற்று.
வேடனின் மனமாற்றம்
உடும்பு பேசியதைக் கேட்ட வேடன். மனதில் விருப்பம் அடைந்து தனது துன்பங்களை ஒழித்து நபிகளைப் பார்த்து “நானும் எனது குடும்பமும் குபிர் மார்க்கத்தினால் நாள்தோறும் செய்த பாவத்தை ஒழியுங்கள்” என்று சொல்லி நபிகளின் பாதங்களைப் பிடித்தான். நபிகள் நாயகம் தன் பாதங்களில் பற்றி நின்ற அவன் கையை எடுத்து கண்களில் பதியும்படி செய்து முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்து அனைவரும் துதிக்க மனம் நெகிழ கலிமாவைத் தமது வாயினால் ஓதினார்.
வேடனும் முகமது நபிகள் கூறிய கலிமாவை ஓதி முறைப்படி நடந்து தொழுகையும் விரும்பி அறிவில் முதியவர் என்று சொல்லும்படி இஸ்லாமியர் ஆனான். பின்னர் பனை மரத்தைப் போன்ற பெரிய துதிக்கையைக் கொண்ட யானையைப் போன்றன தகுதி உடைய வேடன் அந்த உடும்பைப் பார்த்து நான் உன்னை நெருக்கி பிடித்தேன். உனது செய்கையினால் என்னைப் பிடித்து நெருங்கிய பாவங்களை இன்று போக்கினேன். உனது வீடாகிய பெரிய வலையின் கண் போவாயாக என்று சொல்லி ஆசிர்வதித்தான்.
அப்போது அந்த உடும்பானது அங்குள்ள அனைவரையும் பார்த்து மகிழ்ந்து பின்னர் தாமரை மலர் போன்ற முகம் கொண்ட முகமது நபிகளின் முகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து நின்றது.
உடும்பு அவ்விதம் நிற்பதைப் பார்த்த முகமது நபிகள், இனிமையான தன் வாயைத் திறந்து நீ உனது இருப்பிடத்திற்குச் செல்வாய் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார். அதை உடும்பு தன் காதுகளால் கேட்டு மனம் மகிழ்ந்து விருப்பத்தோடு சென்றது.
Unit 2
4. இயேசு காவியம்
இயேசு காவியம் என்பது கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு தற்காலத் தமிழ்க் காப்பியமாகும். இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைக் கவிதை வடிவில் கூறும் இந்த நூல் சுமார் 400 பக்கங்களைக் கொண்டது. இந்நூல் கண்ணதாசன் இறந்து அடுத்த ஆண்டு, அதாவது 1982 இல் வெளியிடப்பட்டது. திருச்சி “கலைக்காவிரி” என்ற அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க கவிஞர் கண்ணதாசன் இக்காவியத்தைப் படைத்தார். குற்றாலத்திலும், திருச்சியிலும் பல நாட்கள் அவர் தங்கியிருந்து, கிறிஸ்தவ இறையியலறிஞர்கள் பலர் உடனிருந்து துணை செய்ய, இக்காவியத்தை இயற்றினார். பின்னர் அறிஞர் குழு திருச்சியில் மும்முறை கூடி, எட்டு நாட்கள் காவியத்தை ஆராய்ந்து திருத்தங்கள் கூற, கவிஞர் தேவைப்பட்ட திருத்தங்களைச் செய்து தந்தபின் இக்காவியம் பதிப்பிக்கப்பெற்றது. கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.
121. பிரியா விடை : அன்புக் கட்டளை
"அன்புடைய குழந்தைகளே உங்க ளோடும் "கலக்கமுற வேண்டாம்நீர் எந்தன் மீதும் "நான்போகும் இடத்திற்கு வழியை நீங்கள் "தந்தையைநான் கேட்கின்றேன் மற்று மேஓர் "செய்கின்ற பாவமெலாம் உலகைச் சாரும் "ஒருவன்என் னிடத்தினிலே அன்பு செய்தால் "அமைதியையே உங்களுக்கு விட்டுச் செல்வேன் "நானேதான் பெருந்திராட்சைக் கொடியாய் நின்றேன் "உங்களுக்குள் சகஅன்பு வேண்டும் என்றேன்
|
Unit -3
பிச்சிப்பூ
பிச்சிப்பூ என்னும் பெண் பாத்திரத்தை மையமாகக் கொண்ட நாவல். பாதிக்குப் பின் தான் தோன்றுகிறாள் பிச்சிப்பூ. அதுவரை அவளது கணவன் மூர்த்தியார் பற்றியும், மீட் பாதிரியார் பற்றியும், சாதி முறைகள் பற்றியும் தான் விலா வாரியாக எடுத்துரைக்கிறது. கிறிஸ்துவர்களுக்கும், உயர் சாதிகளுக்கும் ஒதுக்கப்பட்ட வேலை ஹிந்துக்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இல்லாமல் இருந்த உண்மையை எடுத்துரைத்துள்ளார்.
குமாரகோவிலில் நாடார் சமுதாயத்தினர் நடத்திய கோவில் நுழைவு போராட்டத்தையும், அதில் பிச்சிப் பூ காட்டிய வீர தீரத்தையும் காட்சிப்படுத்தி நிறைவு செய்துள்ளார். நுாறு ஆண்டுகளுக்கு முன் இருந்த கன்னியாகுமரி மாவட்ட பேச்சு வழக்கிலேயே கதையை நகர்த்திச் செல்கிறார்.
அரைமணி நேரத்தில் படித்து முடிக்கக் கூடியது. விறுவிறுப்பு அதிகம். நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய சமூகத்தில் நிலவிய கொடுமைகளைத் தோல் உரித்துக் காட்டும் நுால்.
ஐம்பெருங் காப்பியங்கள்
- சிலப்பதிகாரம் (Silappadhikaram)
- மணிமேகலை (Manimekalai)
- சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
- வளையாபதி (Valaiyapathi)
- குண்டலகேசி (Kundalakesi)
ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐம்பெருங் காப்பியங்கள் என்பர்.
இவ் ஐந்தனுள் சிறப்புத் தகுதி வாய்ந்தவை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஆகும். இவை இரண்டையும் இரட்டைக் காப்பியங்கள் என்று குறிப்பிடுவார்கள். இவ்விரண்டும் கதை நிகழ்ச்சியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. மேலும் சமகாலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.
1 )
. சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இது சேரன் செங்குட்டுவன் சகோதரர் இளங்கோஅடிகள் இயற்றிய காப்பியமாகும். அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள் கோவலன், கண்ணகி,மாதவி இக் கதையில் முக்கிய பாத்திரங்கள்.கண்ணகி கற்பு நெறி தவறாமல் வாழும் பத்தினி .மாதவி பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய். கோவலன் தனது செல்வம் அனைத்தையும் முறை இல்லாமல் செலவழித்து கடைசியில் மிஞ்சிய தனது மனைவியின் காற்சிலம்பை விற்க மதுரைக்கு வருகிறான். கடைவீதியில் அதை விற்க முயலும் போது அரண்மனைக் காவலர்களால் அரசியின் சிலம்பை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு மன்னர் முன் விசாரணை கைதியாக நிற்க வைக்கப்படுகிறான். மன்னன் கோவலன் விற்க முயன்ற சிலம்பு அரசியின் சிலம்பு என குற்றம் சாட்ட,கோவலன் அது தனது மனைவி கண்ணகி யின் காற்சிலம்பு என மறுக்கிறான். ஆனால் மன்னனின் தவறான தீர்ப்பால் கொலை செய்யப்படுகிறான்.கணவன் கொலையுண்ட செய்தி கேட்டு கண்ணகி கோபாவவேசமாக அரசனின் அரச சபைக்கு வருகிறாள்.
- மன்னனின் தீர்ப்பு தவறு என நீதி கேட்கிறாள்.மன்னன் தனது மனைவியின் காற்சிலம்பில் உள்ளது முத்து என கூற தனது சிலம்பில் உள்ளது மாணிக்க பரல்கள் என சிலம்பை வீசி உடைத்து நிருபிக்கிறாள்.
- நீதி தவறிய மன்னன் அக்கணமே உயிர் விடுகிறான்.அரசியும் உடன் உயிர் விடுகிறாள்.கண்ணகி மதுரை நகரமே முதியவர்,குழந்தைகள்,பெண்கள் தவிர மற்ற அனைத்தும் (மதுரை நகரமே) தீக்கிரையாக சபிக்கிறாள்.
2 ) மணிமேகலை
மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.
- அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் ‘அட்சய பாத்திரம்’ கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.
3 ) சீவக சிந்தாமணி
சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்னும் ஐம்பெருங்காப்பியங்களுள் சீவக சிந்தாமணி காலத்தால் முதன்மையானதாகும். வடமொழியில் உள்ள சீவகன் கதைகள் பலவற்றைப் பின்பற்றித் தமிழில் பாடப்பட்டது இந்நூல். இதற்கு முதல் நூல் “க்ஷத்திர சூடாமணி” என்பர். இக்காப்பியத் தலைவன் பெயர் சீவகன் ஆகும். சிந்தாமணி என்பது தேவலோகத்தில் உள்ள ஒரு மணியாகும். அது கற்பகத்தரு மற்றும் காமதேனு போன்று கேட்டதைத் தரும் இயல்புடையதாகும். அதனால்தான் ‘சீவகனுடைய கதையைக் கூறும் சிந்தாமணி போன்ற காப்பியம்’ என்ற பொருளில் இதற்குச் சீவக சிந்தாமணி எனப் பெயரிட்டார் இக்காப்பியத்தின் ஆசிரியர் திருத்தக்கதேவர். சீவக சிந்தாமணி மொத்தம் 3145 பாடல்களைக் கொண்டது. பதின்மூன்று இலம்பகங்களையுடையது. இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும். அத்தியாயம் என்றும் சொல்லலாம். அதாவது உட்பிரிவுக்குத் திருத்தக்கத்தேவர் வைத்த பெயர் இலம்பகம் ஆகும். முத்தி இலம்பகம் தவிர ஏனையவை மகளிர் பெயரையே பெற்றுள்ளன. பெரும்பாலான இலம்பகங்களில் மணநிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. சீவகன் எட்டு பெண்களை மணக்கின்ற நிகழ்ச்சி எட்டு இலம்பகங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் இக்காப்பியத்திற்கு ‘மணநூல்’ என்ற பெயரும் உண்டு. பதிகத்தில் காப்பியத்தின் கதைச் சுருக்கம் கூறப்பட்டுள்ளது.
- இக்காப்பியத்தை இயற்றிய திருத்தக்கதேவர் சமண முனிவராவார். இவர் திருத்தகு முனிவர் என்றும், திருத்தகு மகா முனிவர் என்று அழைக்கப் பெறுவார். இவர் சைன ஆசாரியர் சங்கங்களில் ஒன்றாகிய திரமிள சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர் என்பர். இவர் வாழ்ந்த காலமும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்கும் 7ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருத்தக்கதேவர் சோழர் குடியில் பிறந்தவர். இளமையிலேயே கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கியவர். வடமொழிப் பயிற்சி மிக்கவர். காமம், பொய், கொலை, கள், சூதாடல் என்ற ஐவகைத் தீமையும் அகற்றியவர். சமணத் துறவியாக வாழ்ந்தவர். விருத்தமெனும் பாடல்களைக் கொண்டு பெருங்காப்பியம் பாடியவர்களில் இவர் முதன்மையானவர்.
- ஒரு சமயம் திருத்தக்கதேவர் மதுரை சென்றிருந்தபோது, அங்கிருந்த புலவர்கள், சமண சமயத்தவர் துறவறம் பற்றிப் பாட இயலுமே ஒழிய அகப்பொருட் சுவை மிக்க இன்பத்துறைப் பாடல்களைப் பாட இயலாது என்று இகழ்ந்துரைத்தனர். இதனால் மனவருத்தமுற்றை இவர் தம் ஆசிரியரிடம் இதுபற்றி கூறினார். இவரின் திறமையை உலகுக்கு உணர்த்த விரும்பிய ஆசிரியர், அப்பொழுது குறுக்கே ஓடிய நரி ஒன்றைப் பற்றி ஒரு நூல் இயற்றுமாறு கூறினார். அப்போதே ஆசிரியர் போற்றும் வண்ணம், செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிக் கூறும் ‘நரி விருத்தம்’ என்னும் அற்புதமான ஒரு சிறு நூலை இயற்றினார். திருத்தக்கதேவரின் கற்பனைத் திறனைக் கண்டு வியந்த ஆசிரியர் சீவகன் வரலாற்றை அகப்பொருள் சுவை மிளிர பெருங்காப்பியமாக பாடுமாறு கட்டளையிட்டார். அதோடு ‘செம்பொன்வரைமேல்’ என்ற ஒரு பாடலை எழுதி அவரிடம் கொடுத்து, அதனையே கடவுள் வாழ்த்தாகக் கொண்டு நூலைத் தொடங்குமாறு கூறினார். ஆசிரியர் பாடிய அப்பாடலோடு திருத்தக்கதேவரும், ‘மூவா முதலா’ எனத் தொடங்கும் சித்தரைத் துதிக்கும் பாடல் ஒன்றைப் பாடினார். ஆசிரியர் தாம் பாடிய பாடலைவிட தம் மாணவர் பாடிய பாடல் சிறப்பாக இருப்பது கண்டு, திருத்தக்கதேவரின் பாடலை முதலாகவும், தம் பாடலை இரண்டாவதாகவும் வைக்கும்படி கூறினார். அதனால் தான் இக்காப்பியத்தில் சித்தர் வணக்கம் முதலாவதாகவும், அருகர் வணக்கம் இரண்டாவதாகவும் உள்ளது. திருத்தக்க தேவர் இக்காப்பியத்தை எட்டே நாட்களில் பாடி அருளியதாகக் கூறுவர்.
- பாண்டியன் அவையிலே திருத்தக்கதேவர் தமது நூலை அரங்கேற்றினார். காப்பியத்தின் நடை, அழகு, அமைப்பு, ஒன்பது சுவைகள் ஆகியவற்றைக் கண்டு புலவர்கள் பலர் வியந்து பாராட்டினர். ஆனால் சில அழுக்காறு கொண்ட புலவர்கள், இன்ப சுவை கொண்ட பாடல்களைப் பாட வேண்டுமாயின் இவருக்கு நல்ல முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும் என்று கூறினார்கள். இது கேட்ட திருத்தக்கதேவர் கையிலே நெருப்பை ஏந்தி தமது அகத் தூய்மையை அனைவரும் அறியச் செய்தார்.
- பின்வந்த கம்பர் போன்ற பெரும் புலவர்களுக்குச் சீவக சிந்தாமணி கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது என்றால் மிகையாகாது
4 ) வளையாபதி
வளையாபதியின் ஆசிரியர் பெயர், இயற்றப் பட்ட காலம், அக்காவியத் தலைவன் பெயர், காவியத்தின் கதை போன்றவை தெரியவில்லை. இக்காவியத்தின் 72 பாடல்கள் தான் கிடைத்துள்ளன. அவற்றில் 66 பாடல்கள் 14-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டிலும், 3 பாடல்கள் சிலம்பின் அடியார்க்கு நல்லார் உரையில் மேற்கோளாகவும், 2 பாடல்கள் யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலின் பெயர்தெரியாத ஓர் அறிஞரால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும், இளம்பூரணரின் தொல்காப்பிய உரையில் மேற்கோளாக் காணப்படுவதும் கடவுள் வாழ்த்துப் பாடலென்று கருதப்படுவதுமாகிய எஞ்சிய 1 பாடல் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோளாகவும் கிடைத்துள்ளன. இது ஒரு சமண சமய நூல்.
- புகார் நகரில் நவகோடி நாராயணன் என்னும் செல்வச் செழிப்புமிக்க வணிகன் இருந்தான். அவன் சைவ சமயத்தவன். அவனுக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி அவன் குலத்தைச் சார்ந்தவள். இரண்டாம் மனைவி வேறு குலத்தைச் சார்ந்தவள். அவன் வேற்றுச் சாதிப் பெண்ணை மணந்ததை எதிர்த்து அவன் குலத்தவர்கள் அவனைச் சாதியைவிட்டு ஒதுக்கி வைப்பதாக அச்சுறுத்தவே அவன் தன் இரண்டாம் மனைவியை விட்டுப் பிரிந்தான். அவன் பிறிந்த சமயத்தில் அப் பெண் கருவுற்றிருந்தாள். பின்னர் அவன் கடற்பயணத்தை மேற்கொண்டு பெரும்பொருள் ஈட்டித் திரும்பித் தன் முதல் மனைவியுடன் இன்பமாக வாழ்ந்து வந்தான். இரண்டாம் மனைவி தன் துன்பம் தீர காளி தேவியை வழிபட்டு வந்தாள். சில மாதம் கழித்து அவள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனை நன் முறையில் வளர்த்து வந்தாள். அச்சிறுவனுடைய விளையாட்டு தோழர்கள் அவனைத் தகப்பன் பெயர் தெரியாதவனென்று எள்ளித் துன்புறுத்தவே, அச்சிறுவன் அதுபற்றி தன் தாயிடம் முறையிட்டான். அவள் ஒருவழியாக அவன் தந்தையின் பெயரை அவனுக்குத் தெரிவித்தாள். அது கேட்ட அவன் தன் தந்தையைத் தேடிச் சென்று தன்னை மகனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். ஆயினும் ஊர்க் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு நவகோடி நாராயணன் அவனை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறான். பின்னர் அவன் தாய் காளியின் உதவியால் செட்டிச்சாதிப் பெரியவர்களிடம் தன் கற்பின் உண்மையை நிலைநாட்டுகிறாள். நாராயணனும் அவனைத் தன் மகனாக ஏற்று அவனுக்கு வீரவாணிபன் எனப் பெயரிட்டு, அவர்களுடன் இனிது வாழ்ந்தான்.
- இவ்வாறு இக் காப்பியத்தின் கதை கூறப்பட்டாலும், இந்நூல் சமண சமயக் கருத்துக்களையும் கூறுவதால், சமண நூலில் காளியைப் பற்றிய செய்திகள் இடம் பெற வாய்ப்புகள் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்நூலின் செய்யுட்கள் முழுமையாக கிடைக்கப் பெறாததால் இதுபற்றி அறுதியிட்டுக் கூற இயலவில்லை.
5 ) குண்டலகேசி
இந் நூலின் நாயகி குண்டலகேசி செல்வச் செழிப்புமிக்க வணிகர் குலத்தில் பிறந்தவள். அவள் பெற்றோர் இட்ட பெயர் பத்தா தீசா. அவள் பருவமடைந்து இனிது இருந்த சமயத்தில் அவ்வூரில் சத்துவான் என்பவன் வழிப்பறிக் கொள்ளை அடித்து, அரசனால் கொலைகளத்துக்கு அனுப்பப்பட்டான். அப்போது அவனைச் சாளரத்தின் வழியே கண்டு, அவள் அவன் மீது காதல் கொண்டாள். அது அறிந்த அவள் தந்தை அரசனுக்கு பொருள் தந்து அக்கள்வனை மீட்டு அவளுக்கு மணமுடித்து வைத்தார். இருவரும் சிலகாலம் இனிது வாழ்ந்த பின்னர், அவனுக்கு மனைவியின் நகைகளை கொள்ளை அடிக்கும் எண்ணம் வரவே, அவளைத் தனியே அருகில் இருந்த சேரர் மலை உச்சிக்கு அழைத்துச் சென்றான். அவன் நடத்தையில் சந்தேகம் கொண்ட பத்தா அது பற்றி கேட்க, அவன் நகைகளைப் பறித்துக் கொண்டு அவளை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட இருப்பதைக் கூறினான். அது கேட்ட அவள் சாவதற்கு முன் கடைசியாக அவனை ஒருமுறை சுற்றி வந்து வணங்கவிரும்புவதாகக் கூறி அவனை அம் மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டாள். பின்னர் அவள் சமண மதத்தை தழுவினாள். அவள் தலைக் கூந்தல் பனங்கருக்கு மட்டையால் மழிக்கப்பட்டது. பின்னர் வளர்ந்த அவள் முடி வளைந்து குண்டலம் போக் காட்சி யளித்ததால் குண்டலகேசி என வழங்கப்பட்டாள். அவள் பல இடங்களில் வாதம் புரிந்து, கடைசியில் புத்தரிடம் ஞானத் தெளிவு பெற்று பௌத்தத் துறவியானாள்.
- இக் காப்பியத்தில் தற்சமயம் 19 பாடல்களே கிடைக்கப் பெற்றுள்ளன. இந் நூல் பௌத்த சமயத்தைச் சார்ந்தது. இந்நூலாசிரியர் நாதகுத்தனார் ஆவர். இந்நூலின் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆகும். இந்நூலுக்கு குண்டலகேசி விருத்தம் என்கிற பெயரும் உண்டு.
நூலின் எளிமைக்கு உதாரணமாக ஒரு பாடல்:
(காண்டம் - பெரும்பிரிவு; படலம் - சிறுபிரிவு.)
- கம்பராமாயணம் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கற்பு நெறி நின்று வாழவேண்டும் என்ற உண்மையை ஏகபத்தினி விரதனாம் -இராமன் மூலம் தெரிவிக்கின்றது.
- பிறன் மனைவியை விரும்பினால் அவனும் அவனைச் சார்ந்த சுற்றமும் குலமும் அழிந்துவிடும் என்பதை இந்நூல் விளக்குகின்றது.
- பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப என்னும் நீதி (கிளை = சுற்றம்) இந்நூல் மூலம் உணர்த்தப்படுகிறது.
(சர்வசமயச் சமரசக் கீர்த்தனைகள் - வேதநாயகம் பிள்ளை -கேளும் பூமான்களே என்ற 5 - ஆம் பாடல்)
என்று கல்வி வேண்டி ஒரு பெண் பாடுவதாக வேதநாயகம் பிள்ளை பாடியுள்ளார்.
• அரபி மொழியிலிருந்து பெற்ற வடிவங்கள்
மசலா என்பது கேள்விகள் அல்லது பிரச்சினை என்று பொருள்படும்.
• தமிழ் நாட்டுப்புறப் பாடல் வடிவங்கள்
காவடிச் சிந்து மெட்டமைப்பில் நவநீத ரத்னாலங்காரச் சிந்து, பூவடிச் சிந்து என்பன பாடப் பெற்றன.
யாப்பு இலக்கணமும் அதன் உறுப்புகளும்
யாப்பின் உறுப்புகள் ஆறு வகைப்படும்
தமிழ் எழுத்துகளை யாப்பிலக்கண முறையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
2.குறிலும் ஒற்றும் இணைந்து வருதல் – கல்
4.நெடிலும் ஒற்றும் இணைந்து வருதல் – பால்
1.இரண்டு குறில்கள் இணைந்து வருதல் – பல
2.இரண்டு குறில்கலோடு ஒற்றும் இணைந்து வருதல் – பலர்
3.குறிலும் நெடிலும் இணைந்து வருதல் – படா
4.குறிலும் நெடிலும் ஒற்றும் இணைந்து வருதல் -படாம்
§ * முதல் எழுத்து நெடில் வந்தால் தனித்துதான் வரும்.
§ * இரண்டு நெடில் எழுத்துக்கள் சேர்ந்து வராது. அப்படி வந்தால் பிரிக்க வேண்டும்.
§ * நெடில் எழுத்தை அடுத்து குறில் சேர்ந்து ஓர் அசையாக வராது.
நிரை + நேர் = நிரைபு – பிறப்பு
விளச்சீர் (கூவிளம்,கருவிளம்) என இரண்டு வகைப்படும்.
நேர் +நேர் + நேர் – தேமாங்காய்
நிரை +நேர் +நேர் – புளிமாங்காய்
நேர்+ நிரை +நேர் – கூவிளங்காய்
நிரை +நிரை+ நேர் – கருவிளங்காய்
மேற்கூறிய நான்கும் நேரீற்று மூவசைச்சீர் என்று அழைக்கப்படுகிறது.
நிரை+ நேர்+ நிரை – புளிமாங்கனி
நிரை +நிரை +நிரை – கருவிளங்கனி
பூச்சீர் எட்டின் அமைப்பு வாய்ப்பாடு
நேர் +நேர் +நேர் +நேர் – தேமாந்தண்பூ
நிரை +நேர் +நிரை +நேர் -புளிமாந்தண்பூ
நேர் +நிரை +நிரை+ நேர் -கூவிளந்தண்பூ
நிரை +நிரை +நிரை +நேர் -கருவிளந்தண்பூ
நேர் +நேர் +நேர் +நேர் -தேமாநறும்பூ
நிரை +நேர் +நிரை+ நேர் -புளிமாநறும்பூ
நேர் +நிரை +நிரை +நேர் -கூவிள நறும்பூ
நிரை +நிரை +நிரை +நேர் -கருவிள நறும்பூ
நிழற்சீர் எட்டின் அமைப்பு வாய்ப்பாடு
நேர் +நேர் +நேர் +நிரை -தேமாந்தண்ணிழல்
நிரை +நேர் +நிரை+ நிரை -புளிமாந்தண்ணிழல்
நேர் +நிரை +நிரை +நிரை- கூவிளந்தண்ணிழல்
நிரை +நிரை +நிரை +நிரை -கருவிளந்தண்ணிழல்
நேர்+ நேர் +நேர் +நிரை -தேமாநறுநிழல்
நிரை +நேர் +நிரை+ நிரை -புளிமாநறுநிழல்
நேர் +நிரை +நிரை+ நிரை -கூவிளநறுநிழல்
நிரை +நிரை +நிரை +நிரை -கருவிளநறுநிழல்
இவ் பூச்சீர் எட்டும், நிழற்சீர் எட்டும் ஆகிய பதினாறும் நாலசைச்சீர்களாக கருதப்படும்.
1.நேரொன்றாசிரியத்தளை: ( மா முன் நேர் )
பரிசில் = நிரை நேர் = புளிமா , வென்றான் =நேர் நேர் = தேமா
2.நிரையொன்றாசிரியத்தளை: ( விள முன் நிரை )
மாம்பழம் – நேர் நிரை – கூவிளம், விழுந்தது – நிரை நிரை – கருவிளம்
3.இயற்சீர் வெண்டளை: (மா முன் நிரை, விள முன் நேர்)
(உம்) கன்று குதித்தது – மா முன் நிரை
பணிவுடன் சென்றான் – விள முன் நேர்
4.வெண்சீர் வெண்டளை : (மா முன் நேர்)
(உம்) கல்விக்கு கம்பன் – மா முன் நேர்
(உம்) வள்ளுவரின் திருக்குறள் – மா முன் நிரை
6.ஒன்றிய வஞ்சித்தளை : ( கனி முன் நிரை)
7.ஒன்றா வஞ்சித்தளை : (கனி முன் நேர் )
(உம்) “இனிய உளவாக இன்னாது கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” – இரண்டு அடிகளால் ஆன குறலடி.
“காயும் கனியும்” – சீர்களால் ஆன குறலடி.
(உம்) “அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பு அன்ன நல்நெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே” – மூன்று அடிகளால் ஆன சிந்தடி.
“ஞானத்தின் மாணப் பெரிது” – சீர்களால் ஆன சிந்தடி.
(உம்) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தன்மை – நான்கு சீர்களால் ஆன அளவடி
“தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றியருவா வதன்வடக்கு – நன்றாய
சீதமலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிரு நாட் டெண்” – நான்கு அடிகளால் ஆன அளவடி.
ஐந்து சீர்களால் ஆன அடி. பல சீர்களால் ஆன ஐந்து அடிகள் ஆனது நெடிலடிகள் எனப்படும்.
(உம்) மங்குவென் உயிரோடென்றுன் மலரடி சென்னி வைத்தாள் – ஐந்து சீர்களால் ஆன நெடிலடி.
கல்லதர்க் கவலை செல்லின், மெல் இயல்
புயல் நெடும் கூந்தல் புலம்பும்
வயமான் தோன்றல்! வுல்லாதீமே. (ஐங்.304)- ஐந்து அடிகளால் ஆன நெடிலடி
(உம்) “மூலையில் கிடக்கும் வாலிபனே – தினம்
பாலை வனம்தான் வாழ்க்கையென – வெறும்
வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்
கருங்கல் பாறையும் நொறுங்கி விழும் -உன்
கைகளில் பூமி சுழன்று வரும்!” – ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் ஆன அறுசீர் கழிநெடிலடி.
அடிகள் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது அடி மோனை எனப்படும்.
(உம்) “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சீர்கள் தோறும் முதலெழுத்து ஒன்றி வருவது சீர் மோனை எனப்படும்.
(உம்) “கற்க கசடற கற்றவை கற்றபின்”
செய்யுளின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை எனப்படும். எதுகைத் தொடை இரு வகைப்படும். அவை,
அடிகள் தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும்.
(உம்) “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
சீர்கள் தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது சீர் எதுகை எனப்படும்.
(உம்) “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல”
§ ஒரு செய்யுளில் அடிகளில் முரண்படுவது அடிமுரண் ஆகும்.
§ ஓர் அடியில் உள்ள சீர்களில் முரண்படுவது சீர் முரண் எனப்படும்.
(உம்) “துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இக்குறட்பாவில் துன்பம் – இன்பம் என அடிகளில் முரண்பட்டு நிற்பதைக் காண்கிறோம். இவை அடிமுரண் ஆகும்.
(உம்) “இனிய உளவாக இன்னாது கூறல்”
இவ்வடியில் இனிய – இன்னாத என சீர்கள் முரண்படுவதால் இவை சீர்முரண் எனப்படும்.
§ ஒரு செய்யுள் அடிகளில் இயைபு அமைவது அடிஇயைபு ஆகும்.
§ ஓர் அடியில் உள்ள சீர்களில் இயைபு அமைவது சீர் இயைபு எனப்படும்
(உம்) “திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடுமலை
தங்குபுயல் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை”
இங்கு மலை என இரண்டு அடிகளிலும் இயைந்து வந்ததால் இவை அடி இயைபு எனப்படும்.
(உம்) “பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்”
இவ்வடியில் உள்ள சீர்களில் மின் என இயைந்து வந்துள்ளதால் இவை சீர் இயைபு எனப்படும்.
ஒரு செய்யுளின் அடிகளிலும், சீர்களிலும் அசைகள் அளபெடுத்து வருவது அளபெடைத்தொடை எனப்படும்.
§ ஒரு செய்யுள் அடிகளில் அளபெடை அமைவது அடிஅளபெடை ஆகும்.
§ ஓர் அடியில் உள்ள சீர்களில் அளபெடை அமைவது சீர் அளபெடை எனப்படும்.
(உம்) “கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
(உம்) “அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்”
இவ்வடியில் உள்ள சீர்களில் அழிவதூஉம் – ஆவதூஉம் என அளபெடுத்து வந்துள்ளதால் இவை சீர் அளபெடை எனப்படும்.
(உம்) “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
(உம்) “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
மோனை – முதல் எழுத்து ஒன்றுபடல்
எதுகை – இரண்டாம் எழுத்து ஒன்றுபடல்
இயைபு – இறுதி எழுத்து ஒன்றுதல்
இரட்டைத் தொடை – ஒரே சொல்லே அடிமுதல் வருதல்
செந்தொடை – இவற்றில் பொருந்தாமல் தனித்து
விகற்பங்கள் தொடைகளுடன் சேரும் முறை
5.மேற்கதுவாய்
= 1, 3, 4 சீர்கள்
6.கீழ்க்கதுவாய்
= 1, 2, 4 சீர்கள்
ஐந்து தொடைகளுடன் ஏழு விகற்பங்களும் ஒன்றாய்ச் சேரும்.
இது போன்று ஒவ்வொரு விகற்பமும் தொடையுடன் சேர்ந்து வரும்.
§ அந்தாதித் தொடை, இரட்டைத் தொடை, செந்தொடை ஆகிய மூன்றுக்கும் தொடை விகற்பங்கள் இல்லை.
§ இதன் அடிப்படையில் தொடை விகற்பங்கள் மொத்தம் (7x 5=35) 35 ஆகும்.
by admin | Posted
on 05/31/2021
திருக்குறள் உள்ள ஒரு குறளும் உவமை அணியை எடுத்து காட்டுவன. இத்தொடரில் வரும் உவமை உருபு அற்றே.
“இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்”
உதாரணம்: முத்துப்பல், பவளவாய், கயல்விழி
பவளம் போல் சிறப்பு பவளத்தின் பண்பு.
உதாரணம்: புலிமறவன், குரங்குமனம்
செயலை விளக்குவது
புலியின் வீரம், தாவும் மனம்.
உதாரணம்: மழைக்கை
மழை போல பொழியும்(கொடுக்கும்) கை
சான்று: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்
உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு: போல
வெளிப்படையாகத் தெரியாத உவமைஉருபுகள் உவமைத்தொகை எனப்படும். அதாவது உவமை தொக்கி நிற்பது.
உதாரணம்: கயல்விழி – கயல் போல் விழி
இங்கு உவமை உருபு (போல்) மறைந்து நிற்கிறது.
இதே போல இன்னொரு உதாரணம்:
மதிமுகம் – மதி போன்ற முகம்
உவமை உருபு (போன்ற) மறைந்து நிற்கிறது.
உதாரணம்:
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று
· இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும்.
· 'முகநிலவில் வியர்வை முத்துகள் துளிர்த்தன` என்று உருவகமாக எழுதுகிறார்கள்.
'தேன் போன்ற தமிழ்' என்று கூறுவது உவமை அணி
'தமிழ்த்தேன்' என்று கூறுவது உருவகம்
வெய்ய கதிரோன்
விளக்காகச் - செய்ய
சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
உருவகப்படுத்தப்பட்டு உள்ளன. எனவே. இப்பாடல் உருவக அணி அமைந்ததாகும்.
இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக
வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி
அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனவோர்
என உருவகிக்கப் பெற்றுள்ளதனால், இப்பாடல் உருவக அணியாகும்.
ஏகதேச உருவக அணி எடுத்துக்காட்டு
அறிவு என்னும் விளக்கைக் கொண்டு அறியாமையை நீக்க வேண்டும்.
· இத்தொடரில் அறிவு விளக்காக உருவகப்படுத்தப்பட்டு உள்ளது.
· அறியாமை இருளாக உருவகப்படுத்தப்படவில்லை.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல் - திருக்குறள்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் - திருக்குறள்
அவ்வாறு இல்லாமல் ஒரு பொருளின் அனைத்துப் பகுதிகளையும் உருவகப்படுத்திக் கூறுவது முற்றுருவகம் ஆகும்.
"நற்குணமு நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு" - நளவெண்பாச் செய்யுள்
ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி என முன்னர் கற்றோம். |
|
· தண்டியலங்காரம், மாறனலங்காரம் என்பன அணியிலக்கணம் குறித்த தமிழ் நூல்கள்
"கூற்றினும் குறிப்பினும் ஒப்புடை இருபொருள் வேற்றுமைப் படவரின் வேற்றுமை யதுவே" - தண்டி -நூ. 46
தேனும் வெள்ளைச்சர்க்கரையும் இனிப்புச்சுவை உடையவை.
· தேன் உடலுக்கு நன்மை செய்யும்:
· வெள்ளைச் சர்க்கரை உடலுக்குத் தீங்கு செய்யும்.
வெள்ளைச்சர்க்கரைக்கும் தேனுக்கும் இடையே ஒற்றுமையும் உண்டு; வேற்றுமையும் உண்டு.
· இரண்டும் இனிப்புச்சுவை உடையவை என்பது ஒற்றுமை.
· ஒன்று உடலுக்கு நன்மை செய்யும்; இன்னொன்று தீங்கு செய்யும் என்பது வேற்றுமை.
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
திருவள்ளுவர் நெருப்பு, நாக்கு என்னும் இருபொருள்களை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.
· நெருப்பு வெம்மையால் சுடுகிறது;
· நாக்குக் கடுஞ்சொற்களால் சுடுகிறது என இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை முதலில் குறிப்பிட்டார்.
இவ்வாறு அமையப் பாடுவது வேற்றுமை அணி எனப்படும்.
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடங்களிலும் வருதலே பின்வருநிலை அணியாகும்.
· செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ, பொருளோ, சொல்லும் பொருளோ மீண்டும் மீண்டும் வந்து அழகு சேர்க்கும்.
பின்வருநிலை அணி எத்தனை வகைபடும்?
பின்வருநிலை அணியின் வகைகள் - இது மூன்று வகைப்படும்.
சொல் பின்வருநிலையணி என்றால் என்ன?
முன் வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருள் உணர்த்துவது சொல் பின்வருநிலை அணியாகும்.
· செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது
சொல் பின்வருநிலையணி எடுத்துக்காட்டு 1
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
இக்குறளில் 'துப்பு' என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வேறு வேறு பொருள்களைத் தருகிறது.
என்று பல பொருள்களில் வருவதைக் காணலாம்.
"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்" - குறள் 751
என்னும் திருக்குறளில் பொருள் என்னும் சொல் நான்கு முறை வந்துள்ளது.
· முதல் இரண்டு இடங்களில் தகுதி அல்லது மதிப்பு என்னும் கருத்திலும்,
· பின் இரண்டு இடங்களில் செல்வம் என்னும் கருத்திலும்
பொருள் பின்வருநிலையணி விளக்கம்
ஒரு பொருள் குறித்த பல சொற்கள் ஒரு செய்யுளில் இடம் பெறுவது பொருள் பின்வருநிலைஅணி ஆகும்.
பொருள் பின்வருநிலையணி என்றால் என்ன?
செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களில் வருவது பொருள் பின் வருநிலையணி ஆகும்.
· செய்யுளில் ஒரே பொருள்தரும் பல சொற்கள் வருவது
பொருள் பின்வருநிலையணி எடுத்துக்காட்டு 1
ஆகிய சொற்கள் மலர்ந்தன என்ற ஒரு பொருளையே தந்தன.
ஒலி என்னும் பொருள்படும் சொற்களான,
ஆகியன இடம் பெற்றுள்ளன. இதனால் இச்செய்யுளில் இடம்பெற்றுள்ள அணி 'பொருள் பின்வருநிலை அணி' ஆகும்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
இக்குறட்பாவில் செல்வம், மாடு ஆகிய இரு சொற்களுமே செல்வத்தையே குறிக்கின்றன.
சொற்பொருள் பின்வருநிலையணி விளக்கம்
சொற்பொருள் பின்வருநிலையணி என்றால் என்ன?
முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர்ப் பல இடங்களிலும் வருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
· செய்யுளில் முன்னர் வந்த சொல், மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது
சொற்பொருள் பின்வருநிலையணி எடுத்துக்காட்டு 1
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
இப்பாடலில், தீய என்னும் சொல் தீமை என்னும் ஒரே பொருளில் பலமுறை வந்துள்ளது.
எனவே, இது சொற்பொருள் பின்வருநிலையணி.
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச்செயல்"
- குறள் 12
தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்.
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
சிலப்பதிகாரம்
No comments:
Post a Comment